கழற்றறிவார் என்று பட்டப்பெயர் பெற்ற பெருமாக்கோதையார் அமைச்சர்கள் விருப்பத்தை ஏற்று சேரநாட்டு மன்னனாக முடி சூடினார் . செங்கோலை தாங்கிய சேரமான் பட்டத்து யானை மீதேறி ஆலயம் சென்று இறைவனை மனதார வழிப்பட்டு ஊர்வலமாக அரண்மனை திரும்பினார் . வழியில் வண்ணான் ஒருவன் துணி வெளுக்க உபயோகிக்கும் உவர்மண் பொதியை தோளில் சுமந்து கொண்டு எதிரே வந்தான் . உவர் மண் மழையினால் கரைந்து அவன் உடலெல்லாம் வெள்ளையாக வழிந்து திருநீறு பூசினாற்போல காணப்பட்டது . அதை கண்ணுற்ற சேரமான் மனதில் சதா குடி இருக்கும் சிவபெருமான் அடியாராக வண்ணான் காட்சி அளித்தான் . உடனே யானையிலிருந்து இறங்கி அவன் காலில் விழுந்தார். வண்ணான் நடுங்கி ஐயா நான் வண்ணான் என்று நடுங்கியபடி கூறினான். ஆனால் சிறிதும் கலக்கமடையாத சேரமான் 'அடியேன் சேரன் . எனக்கு சிவனடியார் கோலத்தை காட்டினீர். மகிழ்ச்சி . வருந்தாமல் செல்லுங்கள் ' என்று கூறி அனுப்பினார் என்னே அவர் சிவபக்தி .
No comments:
Post a Comment