Thursday, 30 May 2019

   தினமும்   ஆடவல்லானை   பூசித்து   பூஜையின்   முடிவில்   பெருமானின்   சிலம்பொலி   கேட்டு  மெய்சிலிர்த்து   கொண்டிருந்த   சேரமான்   திடீரென   ஒரு   நாள்   சிலம்பொலி   கேட்காத   காரணத்தால்   மிக்க   மனவேதனை   அடைந்தார் .  தாம்   எதோ   பெரும்    தவறு  செய்து  விட்டதாக    எண்ணினார் .   ஈசன்   அன்புக்கு   பாத்திரமான   அவர்   ஏனோ   அவருடைய   வெறுப்புக்கு   ஆளாகி   விட்டதாக   மனம்   கலங்கினார் .  அவரால்   அந்த   ஏமாற்றத்தை    தாங்க   இயலவில்லை.  ஐயன்   அன்பை   இழந்த   பிறகு   வாழ்வதில்   அர்த்தமில்லை   என்று   முடிவு   செய்தார் .  உடனே   தன்   வாளை   எடுத்து   தன்னை   மாய்த்துக்கொள்ள   முனைந்தார் .  அப்போது   அவருக்கு   சிலம்பொலி   கேட்டது .  உடனே   சேரமான்   வாளை   எறிந்து   விட்டு   ஐயனே   உயிரை   மாய்த்து   கொள்ள  முனையும்   வரை   ஏன்   இந்த   தாமதம்   என்று   வினவினார் .       

No comments:

Post a Comment