தினமும் ஆடவல்லானை பூசித்து பூஜையின் முடிவில் பெருமானின் சிலம்பொலி கேட்டு மெய்சிலிர்த்து கொண்டிருந்த சேரமான் திடீரென ஒரு நாள் சிலம்பொலி கேட்காத காரணத்தால் மிக்க மனவேதனை அடைந்தார் . தாம் எதோ பெரும் தவறு செய்து விட்டதாக எண்ணினார் . ஈசன் அன்புக்கு பாத்திரமான அவர் ஏனோ அவருடைய வெறுப்புக்கு ஆளாகி விட்டதாக மனம் கலங்கினார் . அவரால் அந்த ஏமாற்றத்தை தாங்க இயலவில்லை. ஐயன் அன்பை இழந்த பிறகு வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்தார் . உடனே தன் வாளை எடுத்து தன்னை மாய்த்துக்கொள்ள முனைந்தார் . அப்போது அவருக்கு சிலம்பொலி கேட்டது . உடனே சேரமான் வாளை எறிந்து விட்டு ஐயனே உயிரை மாய்த்து கொள்ள முனையும் வரை ஏன் இந்த தாமதம் என்று வினவினார் .
No comments:
Post a Comment