சேரமான் வருவதை அறிந்த சுந்தரர் அவரை பெரும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு சென்று வரவேற்றார் . தம்பிரான் தோழனை கண்ட சேரமான் அளவிலா ஆனந்தம் அடைந்தார் . அவன் அவர் வீட்டிலே சில காலம் தங்கி அவருடன் பல ஆலயங்களுக்கு சென்று எம்பெருமானை மனதார தொழுது மகிழ்ந்தார் . பாண்டிய நாட்டு தலங்களை சேவித்துக்கொண்டு சுந்தரரை தம் இல்லத்திற்கு அழைத்து சென்றார் . சுந்தரர் கொடுங்கோளுரில் சேரமான் அரசமாளிகையில் சில நாட்கள் தங்கி இருந்தார் . பிறகு ஆரூர் திரும்பினார் . சுந்தரருக்கு கை லாயம் நினைவு வந்து மனம் அலைபாய்ந்தது . ஈசனுடன் சேரும் ஆவல் மனதை வாட்டியது . அவர் மனமுருகி ஐயனை வேண்ட அவரும் மனமிரங்கி தேவர்களை அவரை அழைத்து வர அனுப்பினார் . அவர் ஐராவதத்தில் ஏறி கைலாயம் செல்வதை கண்ட சேரமான் தன் குதிரை காதில் பஞ்சாக்ஷரத்தை ஓத அவர் மின்னல் வேகத்தில் சென்று சுந்தரரை அணுகி அவருடன் சேர்ந்து கைலாயம் அடைந்தார் .
No comments:
Post a Comment