Tuesday, 4 June 2019

சேரமான்   வருவதை   அறிந்த   சுந்தரர்   அவரை   பெரும்   மகிழ்ச்சியுடன்   எதிர்கொண்டு   சென்று   வரவேற்றார் .   தம்பிரான்   தோழனை   கண்ட   சேரமான்   அளவிலா   ஆனந்தம்   அடைந்தார் .  அவன்   அவர்   வீட்டிலே   சில   காலம்   தங்கி   அவருடன்   பல   ஆலயங்களுக்கு   சென்று   எம்பெருமானை   மனதார   தொழுது   மகிழ்ந்தார் .   பாண்டிய   நாட்டு   தலங்களை   சேவித்துக்கொண்டு   சுந்தரரை   தம்   இல்லத்திற்கு   அழைத்து   சென்றார் .  சுந்தரர்   கொடுங்கோளுரில்   சேரமான்   அரசமாளிகையில்   சில   நாட்கள்   தங்கி   இருந்தார் .  பிறகு   ஆரூர்   திரும்பினார் .  சுந்தரருக்கு   கை லாயம்   நினைவு   வந்து   மனம்   அலைபாய்ந்தது .  ஈசனுடன்   சேரும்   ஆவல்   மனதை   வாட்டியது .  அவர்   மனமுருகி   ஐயனை   வேண்ட   அவரும்   மனமிரங்கி  தேவர்களை   அவரை   அழைத்து   வர  அனுப்பினார் .  அவர் ஐராவதத்தில்   ஏறி   கைலாயம்  செல்வதை    கண்ட   சேரமான்   தன்   குதிரை   காதில்   பஞ்சாக்ஷரத்தை   ஓத   அவர்   மின்னல்   வேகத்தில்   சென்று   சுந்தரரை   அணுகி   அவருடன்   சேர்ந்து   கைலாயம்    அடைந்தார்       .

No comments:

Post a Comment