Thursday, 16 May 2019

மகனுடன்   வந்த   அடிகளை   கண்ட   அம்மையார்   விருந்தாளியுடன்   வராத   காரணம்   வினவினாள் .  பரஞ்சோதியார்   நடந்ததை   விவரித்தார் .  வேறு   பிள்ளை   கிடைத்தாலும்   மனம்   கலங்காமல்   பையனை   வெட்டும்போது   பிடித்துக்கொள்ள   தாயார்   கிடைக்க   மாட்டாள்   என்ற   காரணத்தால்   தன்   மகனையே   அழைத்து   வந்ததை   உரைத்தார் .  அப்பத்தினியும்   கணவரின்   கொள்கை   நிறைவேறுவதை   நினைத்து      மனசாந்தியுடன்    தன்   கடமையை  செய்தாள்    .  ஈசன்   கேட்டபடியே    உணவு   தயாரித்து   தம்பதிகள்   விருந்தா.ளியை   வரவேற்றனர் .  ஈசனும்   உணவு   அருந்த   அமர்ந்து   அடிகளையும்   அமரச்சொல்லி   பிறகு   சீராளனையும்   உணவுக்கு   அழைக்க   கூறினார் .  அடிகள்   துக்கத்தை   அடக்கிக்கொண்டு   அவன்   இந்த   வேளைக்கு   உதவ    மாட்டான்     என்று   உரைத்தார் .  ஈசன்   விடாப்பிடியாக   வாசலில்   சென்று   அவனை   கூப்பிடும்   என்று   வற்புறுத்தனார் .   அவரும்  சென்று   மகனே   சீராளா   என்று   அழைத்தார் .  என்ன   அதிசயம்   பள்ளியிலிருந்து   வருவது   போல்   மகன்   வந்தான்  .  அன்னை   சந்தோஷம்   தாங்காமல்   ஓடி  சென்று   மகனை   தழுவிக்கொண்டாள் .   மூவரும்   உள்ளே   சென்ற   போது   சிவனடியாரை  காணாமல்    திகைத்தனர் .  அப்போது  ஈசன்    உமையுடன்   காட்சி   அளித்து   உங்கள்   பெருமை   உலகு   அறியவே   இந்த   நாடகம்   என்று  கூறி   அவர்களுக்கு   சிவபதம்   அளித்தார் .

No comments:

Post a Comment