மகனுடன் வந்த அடிகளை கண்ட அம்மையார் விருந்தாளியுடன் வராத காரணம் வினவினாள் . பரஞ்சோதியார் நடந்ததை விவரித்தார் . வேறு பிள்ளை கிடைத்தாலும் மனம் கலங்காமல் பையனை வெட்டும்போது பிடித்துக்கொள்ள தாயார் கிடைக்க மாட்டாள் என்ற காரணத்தால் தன் மகனையே அழைத்து வந்ததை உரைத்தார் . அப்பத்தினியும் கணவரின் கொள்கை நிறைவேறுவதை நினைத்து மனசாந்தியுடன் தன் கடமையை செய்தாள் . ஈசன் கேட்டபடியே உணவு தயாரித்து தம்பதிகள் விருந்தா.ளியை வரவேற்றனர் . ஈசனும் உணவு அருந்த அமர்ந்து அடிகளையும் அமரச்சொல்லி பிறகு சீராளனையும் உணவுக்கு அழைக்க கூறினார் . அடிகள் துக்கத்தை அடக்கிக்கொண்டு அவன் இந்த வேளைக்கு உதவ மாட்டான் என்று உரைத்தார் . ஈசன் விடாப்பிடியாக வாசலில் சென்று அவனை கூப்பிடும் என்று வற்புறுத்தனார் . அவரும் சென்று மகனே சீராளா என்று அழைத்தார் . என்ன அதிசயம் பள்ளியிலிருந்து வருவது போல் மகன் வந்தான் . அன்னை சந்தோஷம் தாங்காமல் ஓடி சென்று மகனை தழுவிக்கொண்டாள் . மூவரும் உள்ளே சென்ற போது சிவனடியாரை காணாமல் திகைத்தனர் . அப்போது ஈசன் உமையுடன் காட்சி அளித்து உங்கள் பெருமை உலகு அறியவே இந்த நாடகம் என்று கூறி அவர்களுக்கு சிவபதம் அளித்தார் .
No comments:
Post a Comment