Saturday, 4 May 2019

பல்லவ   மன்னன்   மாமல்லன்   பரஞ்சோதியின்   மாபெரும்   சாதனையை   கண்டு   மிக்க   அதிசயித்து    அவரை        கவுரவித்து   பெரும்   பரிசளிக்க   விரும்பினான் .   அமைச்சர்களும்   பிரதானிகளும்   கூட்டி  அச்சபையில்  பரஞ்சோதியின்    ஈடு   இணையற்ற    செயல்களை   வெகுவாக   பாராட்டி   அவரை   போற்றி    கொண்டாடினான் .   அதை   அடுத்து   பேசிய   ஒரு  அமைச்சர்    அவருடைய   பெரும்   சிவத்தொண்டை   வெகுவாக   போற்றி    இப்படிப்பட்டவர்களுக்கு     இவ்வுலகில்   எதிரிகள்   இருக்க   முடியாதன்றோ   என்று  முடித்தார் .    மன்னன்   மிக்க   அதிர்ச்சி   அடைந்தான் .   இவ்வாறு   பெரும்   அடியாரை   போருக்கு   அனுப்பி   பெரும்   பாவத்தை   செய்து   விட்டேனே   என்று   பெரிதும்   வருந்தினான் .  ஆசனத்தை   விட்டு   இரங்கி   பரஞ்சோதி   கால்களில்      விழுந்து   அறியாமல்   தான்   செய்த   பிழையை    மன்னிக்க   வேண்டினான் .  அனால்   பரஞ்சோதி   பெருந்தன்மையுடன்     மன்னா   இதில்  தவறு   என்ன   உள்ளது   .படை   தலைவனாக  என்    கடமையை   தான்   செய்தேன் .  இதில்   உமது  தவறு   ஏதும்   இல்லை .  என்று   சமாதானம்   செய்தார் .

1 comment:

  1. Thanks for the inputs. I was not aware of this.Getting lot of information from this blog.

    ReplyDelete