Wednesday, 1 March 2017

ஐயனுக்குதான்   தன்   அடியார்களை   போற்றுபவர்கள்   மீது   எத்தனை  

பிரீதி ?  அவரே   அடியார்   உள்ளத்தில்   தானே   வாசம்   செய்கிறார் ?தன்னை
வணங்குபவரை   விட   தம்   அடியார்களை   வணங்குபவரை   அதிகம்   நேசிக்கிறார் .  விந்தை யே . அடுத்து ,
வெல்லுமா   மிகவல்ல  மெய்பொருளுக்கு    அடியேன் !
திருக்கோவலூர்   நகரை   தலைநகராக   கொண்ட   சேதி   நாட்டை   ஆண்ட   மன்னன்   மெய்ப்பொருள் . சிறந்த   சிவபக்தன் . நீதி   நெறி   தவறாமல்   நல்லாட்சி   புரிந்துவந்தான் .. நீதி   தவறாத   சிறந்த  சிவபக்த்தனான   அவன்   ஆட்சியில்   பருவம்   தவறாமல்   மழை   பொழிந்து   செழிப்புடனும்    மக்கள்   சந்தோஷத்துடன்   வாழ்ந்ததில்   அதிசயம்   ஒன்றும்  இல்லை .  அவன்   நாட்டு   பாதுகாப்பை   பற்றி   கவலை   பட்டதில்லை .  ஈசன்   மீது   அத்தனை   நம்பிக்கை .  நம்பினோரை   ஈசன்   கைவிடுவாரா ?  முத்தநாதன்   அண்டை   நாட்டரசன் .  அவனுக்கு   சேதி   நாட்டினிமீது   ஒரு   கண் .  

No comments:

Post a Comment