Saturday 25 February 2017

வந்தவரை   வரவேற்று   உள்ளே  உட்காரவைத்து   உள்ளே   சென்ற   மாறனாருக்கு   அப்போதுதான்   நினைவு   வந்தது   வீட்டில்    உண்ண   ஏதும்   இல்லாத    காரணத்தால்   இவரும்   இவர்   மனைவியும்   இரண்டு   நாட்களாக  பட்டினி   என்பது .    யோசனையில்   ஆழ்ந்தார் .  அப்போது கணவரையும்   மிஞ்ச   கூடிய  அன்புள்ளம்   கொண்ட   அவர்   மனைவி    அவருக்கு   நினைவூட்டினாள் .  இரண்டு   நாள்  முன்புதான்   அவர்கள்   விதைத்த   நெல்   இந்த   பெரும்   மழையில்   மண்   கரைந்து   முளைவிட்டு   தண்ணீரில்   மிதந்து   கொண்டிருக்கும் ,   அதை   ஒரு   கூடையில்   அள்ளி   வந்தால்   அதை   குத்தி   அரிசியாக்கி   சமைக்கலாம்   என்று   அறிவுறுத்தினாள் .  மகிழ்ச்சி   அடைந்த   அவர்   அவ்வாறே   விதை நெல்லை   எடுத்து   வந்தார் .  விறகு   இல்லை   என்ற   பிரசினை  எழுந்தபோது   கூரையை   தாங்கும்   கட்டைகள்   உதவின .  இவ்வாறு   அரிசி   சோறு  தயாரானதும்   அதற்கு   ருசியூட்ட   அதற்கும்   அம்மாதரசி   நினைவூட்டினாள் ..  தோட்டத்தில்   முளைத்திருக்கும்   கீரையை   பறித்து   வர   சொன்னால் .  அவரும்   அந்த   இருட்டில்   அவ்வப்போது   வரும்   மின்னல்   ஒளியின்   உதவியால்   கீரை   பறித்துவந்தார்.   அதையும்   சமைத்தாள்   மனைவி .  இருவரும்    நிம்மதியுடன்   அடியாரை   அழைக்க   சென்றனர் .  உறங்கி   கொண்டிருந்த   அவரை   'ஸ்வாமி   உணவு   உண்ண   வாருங்கள் '  என்று   எழுப்பினர் .  எழுந்த   அவர்   உடனே   மாயமாய்   மறைந்தார் .  அற்புத   ஒளி   தோன்றியது . அம்மையுடன்   ஈசன்   தோன்றி   "மாரனாறே    எந்த   நிலையிலும்   அடியார்களுக்கு  விடாமல்    அன்னமிடும்   உங்கள்   இருவர்   திருப்பணியை   கண்டு   யாம்      பூரிப்படைந்தோம்  .  உங்களை   ஆட்கொள்ளவே   யாம்   வந்தோம் .  இனி   எக்காலமும்   என்னுடனேயே   இருப்பீர்கள் '  என்று   கூறி        மறைந்தார் . இவ்வாறு   மாறன்   தன்   மனைவியுடன்   ஐயன்   அடி  சேர்ந்தார் 

No comments:

Post a Comment