வந்தவரை வரவேற்று உள்ளே உட்காரவைத்து உள்ளே சென்ற மாறனாருக்கு அப்போதுதான் நினைவு வந்தது வீட்டில் உண்ண ஏதும் இல்லாத காரணத்தால் இவரும் இவர் மனைவியும் இரண்டு நாட்களாக பட்டினி என்பது . யோசனையில் ஆழ்ந்தார் . அப்போது கணவரையும் மிஞ்ச கூடிய அன்புள்ளம் கொண்ட அவர் மனைவி அவருக்கு நினைவூட்டினாள் . இரண்டு நாள் முன்புதான் அவர்கள் விதைத்த நெல் இந்த பெரும் மழையில் மண் கரைந்து முளைவிட்டு தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் , அதை ஒரு கூடையில் அள்ளி வந்தால் அதை குத்தி அரிசியாக்கி சமைக்கலாம் என்று அறிவுறுத்தினாள் . மகிழ்ச்சி அடைந்த அவர் அவ்வாறே விதை நெல்லை எடுத்து வந்தார் . விறகு இல்லை என்ற பிரசினை எழுந்தபோது கூரையை தாங்கும் கட்டைகள் உதவின . இவ்வாறு அரிசி சோறு தயாரானதும் அதற்கு ருசியூட்ட அதற்கும் அம்மாதரசி நினைவூட்டினாள் .. தோட்டத்தில் முளைத்திருக்கும் கீரையை பறித்து வர சொன்னால் . அவரும் அந்த இருட்டில் அவ்வப்போது வரும் மின்னல் ஒளியின் உதவியால் கீரை பறித்துவந்தார். அதையும் சமைத்தாள் மனைவி . இருவரும் நிம்மதியுடன் அடியாரை அழைக்க சென்றனர் . உறங்கி கொண்டிருந்த அவரை 'ஸ்வாமி உணவு உண்ண வாருங்கள் ' என்று எழுப்பினர் . எழுந்த அவர் உடனே மாயமாய் மறைந்தார் . அற்புத ஒளி தோன்றியது . அம்மையுடன் ஈசன் தோன்றி "மாரனாறே எந்த நிலையிலும் அடியார்களுக்கு விடாமல் அன்னமிடும் உங்கள் இருவர் திருப்பணியை கண்டு யாம் பூரிப்படைந்தோம் . உங்களை ஆட்கொள்ளவே யாம் வந்தோம் . இனி எக்காலமும் என்னுடனேயே இருப்பீர்கள் ' என்று கூறி மறைந்தார் . இவ்வாறு மாறன் தன் மனைவியுடன் ஐயன் அடி சேர்ந்தார்
No comments:
Post a Comment