நிலகண்டரின் சரிதத்தை காணும்போது ஈசன் தம் தொண்டர்களின் இதயத்தில் வாழ்கிறார் எனும் அவ்வை யின் கூற்றிலுள்ள பெரும் உண்மை நன்கு புலப்படும் . அவர் ஐயன் மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்பதில் ஐயம் இல்லை . அதை அவர் வெளி காட்டிய விதம் நம்மை வியக்க வைக்கிறது . சிவனடியார்களை அவர் ஈசனுக்கு சமமாகவே பாவித்து அவர்களுக்கு தொண்டு செய்வதையே தவமாக செய்து வந்தார் . ஐயன் மீது சத்தியம் என்ற அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு அத்தனை ஆண்டுகள் புலன்களை கட்டுப்படுத்தி மனதில் ஒரு சிறிதும் சலனமில்லாமல் பக்தியே துணையாக வாழ்ந்த அந்த பாங்கு நம்மை மெயசிலிர்க்க வைக்கிறது . இவர் காட்டிய பக்தியை காட்டிலும் ஈசன் இவர் மீது காட்டிய அன்பு நம்மை பெரிதும் வியக்க வைக்கிறது . "தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே "
No comments:
Post a Comment