Friday, 3 February 2017

நிலகண்டரின்   சரிதத்தை   காணும்போது  ஈசன்   தம்   தொண்டர்களின்   இதயத்தில்   வாழ்கிறார்   எனும்   அவ்வை யின்   கூற்றிலுள்ள   பெரும்   உண்மை   நன்கு   புலப்படும் .  அவர்   ஐயன்   மீது   மிகுந்த   பக்தி   கொண்டவர்   என்பதில்   ஐயம்   இல்லை .  அதை   அவர்   வெளி   காட்டிய   விதம்   நம்மை   வியக்க   வைக்கிறது .  சிவனடியார்களை   அவர்   ஈசனுக்கு   சமமாகவே   பாவித்து   அவர்களுக்கு   தொண்டு   செய்வதையே   தவமாக    செய்து   வந்தார் .  ஐயன்   மீது   சத்தியம்   என்ற   அந்த   வார்த்தைக்கு   கட்டுப்பட்டு   அத்தனை   ஆண்டுகள்   புலன்களை   கட்டுப்படுத்தி   மனதில்   ஒரு   சிறிதும்   சலனமில்லாமல்   பக்தியே   துணையாக   வாழ்ந்த  அந்த பாங்கு   நம்மை  மெயசிலிர்க்க   வைக்கிறது .  இவர்   காட்டிய   பக்தியை   காட்டிலும்   ஈசன்   இவர்  மீது    காட்டிய   அன்பு   நம்மை   பெரிதும்   வியக்க   வைக்கிறது .  "தொண்டர்   தம்   பெருமை   சொல்லவும்   பெரிதே "

No comments:

Post a Comment