Wednesday, 15 February 2017

சிவனடியார்   இவ்வாறு   கேட்டுவிட்டு   இயற்பகையார்   முகத்தை   கவனித்தார் .  அவர்   முகத்தில்   ஒருவித   சலனமும்   இல்லை .  தன்னிடம்   உள்ளதை   கேட்டாரே   என்ற   மன   நிம்மதி   மட்டும்   தான்   இருந்தது .  என்னிடம்   உள்ளதை   கேட்டு   என்னை   நிம்மதி   கொள்ள  செய்துவிட்டீர் .  என்று   கூறி   விட்டு   உள்ளே   சென்று   தன்   மனைவியை   நோக்கி   இந்த   சிவனடியாருக்கு   உன்னை   நான்   அளித்து   விட்டேன் .  இனி   அவருடன்   செல்வது தான்   முறை .  என்று   கூறு கிறார்.  அந்த   அம்மையாரும்   எவ்வித   சலனமும்   இல்லாமல்   கணவனின்   பாதங்களில்   வீழ்ந்து   நமஸ்கரித்துவிட்டு   குனிந்த   தலையுடன்   சிவனடியார்   பக்கம்   போய்   நின்றாள் .  சிவனடியார்   சலனமில்லாத   அவள்   முகத்தை   கவனித்தார் .

No comments:

Post a Comment