Monday, 13 February 2017

சிவனடியார்  உடனே   எனக்கு   ஒரு   காரியம்   ஆகவேண்டும் . அது   உன்னிடம்   வந்தால்தான்   நிறைவேறும்   என்று   கேள்விப்பட்டேன் .  அதனால்தான்   உன்னிடம்   வந்தேன்   என்கிறார் .  இயற்பகையார்க்கு   மிக்க   மகிழ்ச்சி .  மகிழ்வோடு   என்னிடம்   உள்ளது    எதுவானாலும்   தயக்கமே   வேண்டாம் ,  கேளுங்கள்   என்று   வற்புறுத்தி   சொன்னார் . சிவனடியார்   நன்றாக   யோசித்து   சொல்லும்,  பிறகு   வார்த்தை   தவற   கூடாது   என்று   எச்சரிக்கிறார் .மேலும்   இத்தனை   காலமாக   வறண்டு   கிடந்த   வாழ்வை   வளமாக்க   எண்ணுகிறேன்   என்கிறார் .  இயற்பகையார்  சுவாமி   காலம்   தாழ்த்த   வேண்டாம்  என்னிடமுள்ள   எதுவாயினும்   தயங்காமல்   கேளும் .  என்று   வற்புறுத்துகிறார் .   உடனே   சிவனடியார்   இத்தனை   காலமாக   பிரம்மச்சர்யத்தை   கடைப்பிடித்து   அலுத்து   விட்டேன் .  இனி   எனக்கு   துணையாக   நீ   பிரியமுடன்   வாழ்ந்து   வரும்  உன்   மனைவியை   கேட்கத்தான்   நான்   வந்தது   என்றார் .

No comments:

Post a Comment