சிவனடியார் உடனே எனக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் . அது உன்னிடம் வந்தால்தான் நிறைவேறும் என்று கேள்விப்பட்டேன் . அதனால்தான் உன்னிடம் வந்தேன் என்கிறார் . இயற்பகையார்க்கு மிக்க மகிழ்ச்சி . மகிழ்வோடு என்னிடம் உள்ளது எதுவானாலும் தயக்கமே வேண்டாம் , கேளுங்கள் என்று வற்புறுத்தி சொன்னார் . சிவனடியார் நன்றாக யோசித்து சொல்லும், பிறகு வார்த்தை தவற கூடாது என்று எச்சரிக்கிறார் .மேலும் இத்தனை காலமாக வறண்டு கிடந்த வாழ்வை வளமாக்க எண்ணுகிறேன் என்கிறார் . இயற்பகையார் சுவாமி காலம் தாழ்த்த வேண்டாம் என்னிடமுள்ள எதுவாயினும் தயங்காமல் கேளும் . என்று வற்புறுத்துகிறார் . உடனே சிவனடியார் இத்தனை காலமாக பிரம்மச்சர்யத்தை கடைப்பிடித்து அலுத்து விட்டேன் . இனி எனக்கு துணையாக நீ பிரியமுடன் வாழ்ந்து வரும் உன் மனைவியை கேட்கத்தான் நான் வந்தது என்றார் .
No comments:
Post a Comment