இயற்பகையார் இனி அவள் உமக்கு உரியவள். அழைத்து செல்லலாம் . வேறு ஏதாவது சேவை தேவையா ? என வினவுகிறார் . உடனே அடியார் இனி தான் நான் கேட்க போவது பெரிய உதவி . அதை செய்தால் போதும் என்கிறார் . உடனே இயற்பகையார் சொல்லுங்கள் செய்ய காத்திருக்கிறேன் என்கிறார் . உடனே சிவனடியார் அப்பனே, உன் மனைவியை நான் அழைத்துக்கொண்டு இந்த ஊரை தாண்ட முடியுமா? உங்கள் சுற்றத்தாரும் ஊர் மக்களும் என்னை சும்மா விடுவார்களா ? என வினா எழுப்பினார் . எங்களை பத்திரமாக ஊர் எல்லை வரை கொண்டுபோய் விடு என்கிறார் . அவரும் இதை எப்படி மறந்து போனேன் என்று தம்மையே நொந்துகொண்டு கவலை வேண்டாம் சுவாமி நான் உங்களை பத்திரமாக வழி அனுப்புகிறேன் என்று சொல்லி தன் வாளுடன் அவர்களுக்கு காவலாக முதலில் செல்கிறார் . எதிர்பார்த்தபடி உறவினர்கள் திரண்டு வந்து எதிர்க்கின்றனர் . இயற்பகையார் கத்தியை சுழற்றியபடி எல்லோரையும் எதிர்த்து வீழ்த்தியபடி முன்னேறினார் சினடியாரும் இயற்பகையார் மனைவியும் பின் தொடர்ந்தனர் . ஊர் எல்லை தாண்டியவுடன் இயற்பகையார் சிவனடியாரை வணங்கி விட்டு திரும்பி கூட பார்க்காமல் திரும்ப புறப்பட்டார் . அவர் சிறிது தூரம் வந்தபோது இயற்பகையாரே என்ற குரல் கேட்டு திரும்பினார் . என்ன ஆச்சர்யம் ! ஈசன் அம்மையுடன் காட்சி தந்தார் . ''இயற்பகையார் உமது மனஉறுதியும் பற்றற்ற நிலையம் எம்மை அதிசயிக்க வைக்கிறது . நீர் உம்மனைவியுடன் சுகமாக வாழ்ந்து பிறகு எம்மை வந்தடைவீர் . '' என்று வாழ்த்தி அவர் வாளுக்கு இறையானவர்களை பிழைக்க செய்கிறார் .
No comments:
Post a Comment