Friday, 24 February 2017

வாயிற்கதவை   திறந்த   மாறனார்   அங்கு   வயது   முதிர்ந்த   ஒரு   சிவனடியாரை   கண்டு   வியப்படைந்தார் .  ஸ்வாமி   இந்த   மழையில்   தாங்கள்  எங்கிருந்து   வருகிறீர்கள்? .  உள்ளே   வாருங்கள். உள்ளே   வந்து   இந்த   ஈர   உடைகளை   களைந்து   வேறு   ஆடைகளை   அணியுங்கள் .  அதற்குள்   உணவு   தயாராகிவிடும்   என்று   உபசரிக்கிறார் .  அத்தகைய   இக்கட்டிலும்   சிவனடியார்   ஒருவர்   உணவு   அருந்த    வந்ததில்   அவருக்கு மட்டற்ற    மகிழ்ச்சி .  வந்தவர்   நானொரு   யாத்திரீகன் .  ஊர்   ஊராய்   சுற்றி   வருபவன் . இந்த   ஊர்   வந்தபோது   பெரும்   மழை   பிடித்து   கொண்டது .  பசி   வாட்டுகிறது .  இந்த   ஊரில்   எல்லோரும்   உன்   வீட்டில்   ஒரு   போதும்   பசி   என்று   வந்தவர்கள்   உண்ணாமல்   போனதே   கிடையாது   என்று  என்னை   இங்கே   அனுப்பினார்கள்,  என்று   கூறினார் .  மாறனார்   உடனே   உள்ளே   அமருங்கள்   உணவு   தயாரானதும்   அருந்தலாம்   என்று   உபசரித்தார் .

No comments:

Post a Comment