Tuesday, 31 January 2017

திடுக்கிட்ட   நீலகண்டர்   ஆண்டவன்   தனக்கு    அப்பாக்கியம்   தரவில்லை   தனக்கு   பிள்ளை   செல்வம்   இல்லை   என்கிறார் . உடனே  முதியவர்   மனைவியை   அழைத்து   அவள்   கை   பிடித்தபடி   கோவில்   குளத்தில்   இறங்கி   சத்தியம்   செய்   என்கிறார் .  உடனே   நீலகண்டர்   கைத்தடியின்   ஒரு   முனையை   தான்   பிடித்துக்கொண்டு   மறுமுனையை   தன்   மனைவியை   பிடிக்க   செய்து   குளத்தில்   இறங்குகிறார் ..  கோபமடைந்த    பெரியவர்   இதை   நான்   ஒப்புக்கொள்ள   முடியாது   நான்   செல்கிறேன்   என்று   பயமுறுத்துகிறார் .  இப்படி   நீ   செய்வதன்   காரணத்தை   ஊர்   பெரியோர்கள்   முன்   விளக்கு   இல்லையெனில்   இந்த  பழி    உன்னை  விட்டு   நீங்காது.  நான்   செல்கிறேன்   என்று   முடிவாக   கூறுகிறார் .   வேறு   வழியின்றி   நடந்த   உண்மைகளை   அவர்   எல்லோர்   முன்   விளக்குகிறார் . அப்போது   அவ்வதிசயம்   நிகழ்கிறது .   நீலகண்டர்   தம்பதியினர்   அக்குளத்திலிருந்து   இளம்   தம்பதியினராக   எழுகின்றனர் .ஈசன்   அவர்களுக்கு   காட்சி   கொடுத்து   சிவபதத்தையும்   கொடுக்கிறார் .  இவ்வாறு   நீலகண்டர்   திருநீலகண்ட   நாயனார்   ஆகிறார் .

No comments:

Post a Comment