Thursday, 23 February 2017

மாறனாருக்கு   சோதனை   காலம்   துவங்கியது ..  வயலில்   விளைச்சல்   குறைய   ஆரம்பித்தது .  ஆனால்   அவருடைய   விருந்தோம்பல்    குறைவில்லாமல்   தொடர்ந்தது .  கையிலுள்ள   செல்வம்   கரைந்தது .   வீட்டிலுள்ள   பண்டங்கள்   காசாக   மாறி   விருந்தோம்பல்   தொடர்ந்தது .  எல்லா   பொருளும்   தீர்ந்ததும்   அக்கம்பக்கத்தில்    கைமாறாக   பணம்   வாங்கி   சில   நாட்கள்   தொடர்ந்தது . சோதனையாக   இரண்டு   நாட்கள்   விடாமல்   அடைமழை   பெய்து   கணவன்   மனைவி   இருவரும்   பட்டினி   கிடைக்க   நேர்ந்தது .  இருவரும்   பட்டினியுடன்   படுத்தனர் .  நடு   நிசியில்   வாசல்   கதவை   யாரோ   தட்டும்   ஓசை   கேட்டு   திடுக்கிட்டு   எழுந்த   மாறனார்   கதவை   திறந்தார் . 

No comments:

Post a Comment