Tuesday, 7 February 2017

இல்லையே   என்னாத   இயற்பகைக்கும்   அடியேன்||
காவிரி  நதி  கடலோடு    சங்கமமாகும்   இடத்தில்  அமைந்திருக்கும்   நகரம்
  காவிரிப்பூம்பட்டினம்  ஆகும் .   அங்கு   வணிகர்   குலத்தில்   பிறந்தவர்   இயற்பகை  நாயனார்   ஆவர் .  பரம்பரையாக   பெரும்   செல்வம்   படைத்தவர்கள் .  வணிக   குலத்திற்கு   இவரே   தலைவர் ..இத்தனை   செல்வம்   படைத்தும்   அவருக்கு    அதில்   பற்றில்லாமல்   வாழ்ந்தார் .ஈசனிடம்   அளவு   கடந்த   பக்தி   கொண்டிருந்தார் .  சிவனடியார்கள்   யார்   எதை   யாசித்தாலும்      மறுக்காமல்   வழங்கும்   வழக்கத்தை   ஒரு   தவமாக   கடைப்பிடித்து   வந்தார் .சிவபெருமானை   தவிர   வேறு   எதிலும்   பற்று   அற்றவராக   பெயருக்கு   ஏற்றவாறு   இயற்கைக்கு   புறம்பாக   வாழ்ந்து   வந்தார் .   

No comments:

Post a Comment