ஆடவல்லான் இந்த எண்ணம் மனத்தில் கொண்டு இத்தேனை வரும் கால மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை முக்கிய கடமையாக கொண்டார் . உடனே ஒரு முதியவராக உருமாறி மாணிக்க வாசகரை அணுகினார் . தாங்கள் பாடிய திருவாசகம் எழுத்து வடிவில் உள்ளதா என வினவினார் . மணிவாசகர் இல்லை என பதில் உரைத்தார் . உடனே ஈசன் தாம் அதற்காகவே வந்திருப்பதாகவும் அவருக்கு மறுப்பு ஏதும் இல்லை என்றால் தானே அவர் சொல்ல சொல்ல ஓலையில் எழுதி கொள்வதாக கூறுகிறார் .மணிவாசகரும் ஒப்புக்கொண்டு பாட ஆரம்பிக்கிறார் . ஈசனும் எழுதி கொண்டே போகிறார் . மிகவும் ரசித்து எழுதுகிறார் .முடிந்ததும் ஈசன் எல்லா பாக்களும் மிக அருமையாக இருப்பினும் எல்லாம் அறம் சார்ந்ததாகவே இருப்பதாக கூறி ஈசனை நாயகனாக பாவித்து தன்னை காதலியாக பாவித்து அந்த பாவத்தையும் பாடுமாறு விண்ணப்பிக்கிறார் . ''பாவை பாடிய வாயால் கோவை பாடுக '' என்று கேட்டுக்கொள்கிறார் . அவரும் அவ்வாறே பாடுகிறார் . அதுவே திருக்கோவையார் ஆகும் .
No comments:
Post a Comment