Tuesday, 28 July 2015

thiruvasakam2

ஆடவல்லான்  இந்த  எண்ணம்  மனத்தில்  கொண்டு  இத்தேனை  வரும்  கால  மக்களுக்கு  கொண்டு  சேர்ப்பதை  முக்கிய   கடமையாக  கொண்டார் . உடனே  ஒரு  முதியவராக  உருமாறி  மாணிக்க வாசகரை  அணுகினார் . தாங்கள்  பாடிய  திருவாசகம்  எழுத்து  வடிவில்  உள்ளதா  என  வினவினார் . மணிவாசகர்  இல்லை  என  பதில்  உரைத்தார் . உடனே  ஈசன்  தாம்  அதற்காகவே  வந்திருப்பதாகவும்  அவருக்கு   மறுப்பு  ஏதும்  இல்லை  என்றால்  தானே  அவர்  சொல்ல  சொல்ல  ஓலையில்  எழுதி  கொள்வதாக  கூறுகிறார் .மணிவாசகரும்  ஒப்புக்கொண்டு  பாட  ஆரம்பிக்கிறார் . ஈசனும்  எழுதி  கொண்டே  போகிறார் . மிகவும்  ரசித்து  எழுதுகிறார் .முடிந்ததும்  ஈசன்   எல்லா  பாக்களும்  மிக  அருமையாக  இருப்பினும்  எல்லாம்  அறம்  சார்ந்ததாகவே  இருப்பதாக  கூறி  ஈசனை  நாயகனாக  பாவித்து  தன்னை  காதலியாக  பாவித்து அந்த  பாவத்தையும்  பாடுமாறு  விண்ணப்பிக்கிறார் . ''பாவை  பாடிய  வாயால்  கோவை  பாடுக '' என்று  கேட்டுக்கொள்கிறார் . அவரும்  அவ்வாறே  பாடுகிறார் . அதுவே  திருக்கோவையார்  ஆகும் . 

No comments:

Post a Comment