Monday, 13 July 2015

manivasakar cont

அன்பே  வடிவான  ஈசன்  தன்  அடியனான  மணிவாசகர்  இவ்வாறு  அவதி யுறுவதை  கண்டு பொறுப்பாரா ? வறண்டு  கிடந்த  வைகையில்  வெள்ளம்  பெருக  வைக்கிறார்  கரையிலுள்ளொர்  பெரும்  அவதிக்கு  ஆளானார்கள் . மன்னனிடம்  செய்தி  தெரிவிக்கப்பட்டது . திடீரென  இவ்விதம்  நேர  என்ன  காரணம்  என வியந்தார் . உடனே  வீட்டுக்கொரு  ஆள்  அனுப்பி  எல்லோரையும்   கரையை  அடைக்கும்  பணியில்  ஈடுபடுத்துமாறு  ஆணை  இட்டான் . அந்த ஊரில்  வந்தி  எனும்  பிட்டு  விற்கும்  கிழவி  இருந்தாள்  சிறந்த  சிவபக்தை . அவள்  யாருமற்ற  அநாதை .அனுப்ப  அவள்  வீட்டில்  யாரும்  இல்லை . ஈசன்  லீலை தான்  என்னவென்பது ? ஈசனே  ஒரு  கூலி  ஆளை போல்  அவளிடம்  வந்து  மன்னனின்  ஆணையை  நிறைவேற்ற  அவளுடைய  சார்பாக  தான்  செல்வதாக  கூறுகிறார்   

No comments:

Post a Comment