Monday, 6 July 2015

cont.

தக்ஷிணாமூர்த்தியால்  தீக்ஷை  பெற்ற  மாணிக்கவாசகரின்  வாக்கிலிருந்து  அருவியாக  வந்த  பாடல்களில்  ஈசன்  மயங்கியதில்  ஆச்சர்யம்  என்ன  உள்ளது . அவரும்  தன்னை  மறந்து  பாடிக்கொண்டு  கையிலுள்ள  திரவியத்தை கொண்டு  கோயில்  கட்டும்  பணியில்  மும்மரமாக  ஈடுபட்டிருந்தார் . அப்போதுதான்  அரசனின்  ஆட்கள்  அவரை   தேடி  வந்தனர் . மணிவாசகர்  தன்  குருவை  நாடினார் . குரு  அவரிடம்  ஒரு மாணிக்க  கல்லை  கொடுத்து  இதை  அச்சாரமாக  கொடுக்க  சொல்லி  ஆவணி  மூலம்  அன்று  குதிரைகள்  வரும்  என்று  சொல்ல  செய்தார் .    

No comments:

Post a Comment