Wednesday, 8 July 2015

manivasakar cont3

மன்னனும்  மணிவாசகர்  சொன்னதுபோல் ஆவணி  மூலம்  வரை  காத்திருக்க  சம்மதிக்கிறான் . நாள்  நெருங்க  நெருங்க  குதிரைகள்  அனுப்பிய  தகவல் எங்கிருந்தும்  கிடைக்காதலால்  சஞ்சலம்  அடைந்து  வாதவூரரை  சிறையில்  அடைக்கிறான் .வாதவூரர்  என்று  முன்பு  அழைக்கப்பட்ட  மாணிக்கவாசகர்  சிறிதும்  சலனமின்றி  இருந்தார் . ஈசனிடம்  தன்னை  ஒப்படைத்தவர்  இனி  எது வாயினும்  அவன்  பொறுப்பு  என்று  அமைதியாக  த்யானத்தில்  இருந்தார் . இந்த  பாட்டு  அவருடைய  நிலையை  சொல்லும் .
அன்றே எந்தன்  ஆவியும்  உடலும்  உடைமை யெல்லாமும்
குன்றே  அனையாய் யென்னை யாட்கொண்டபோதே  கொண்டிலையோ
இன்றோர்  இடையூரெனக்குண்டோ  முக்கண்  எம்மானே
நன்றே  செய்வாய்  பிழை  செய்வாய்  நானோ  இதற்கு  நாயகமே
  இப்பாடலுக்கு  உருகாத  நெஞ்சம்  உண்டோ ? அவர் அமைதியாக  இருந்தாலும்  ஈசன்  பொறுப்பாரா ? தன்  விளையாட்டை  ஆரம்பித்தார் . காட்டில்  நரிகளை  பிடித்து  அவைகளை  குதிரைகளாக  மாற்றி  ஆவணி  மூலத்தன்று  தானே  குதிரை  வியாபாரியாக  வந்து  அரசனிடம்  குதிரைகளை  ஒப்படைத்து  கயிறு  மாற்றிக்கொண்டு  இனி  எது  நேர்ந்தாலும்  தனக்கு  பொறுப்பு  இல்லை  என்று  சொல்லி  மறைந்தார் . அரசனும்  குதிரைகளின்  அழகில்  மயங்கி  ஒபுகொண்டுவிட்டார் 

No comments:

Post a Comment