வாதவூரர் தமிழக கீழ்கடற்கரையை நோக்கி புறப்பட்டார் . அவர் மனம் மட்டும் நல்ல குருவை தேடிய வன்ணமே அலைந்து கொண்டு இருந்தது .ஈசன் தன் விளையாடலை தொடங்குகிறார் . வாதவூரர் வழியில் திருப்பெருந்துறையை அடைகிறார் . அங்கு ஒரு குருந்தை மரத்தடியில் ஒரு சிவனடியார் தன் சிஷயர்கள் புடை சூழ அமைந்திருப்பதை காண்கிறார் . அவரை கண்ட மாத்திரத்திலேயே வாதவூரர் மனம் சிலிர்க்கிறது . ஓடி சென்று அவர் காலடியில் வீழ்கிறார் . அவரும் வாதவூரரை ஆசீர்வதித்து பாததீக்ஷை வழங்குகிறார் . வதவூரரும் அளவிலா ஆனந்தம் அடைகிறார் .அவ்வளவே . அவர் தன்னை மறக்கிறார் . தான் அமைச்சர் தன் கடமைகள் எல்லாம் மறந்து விடுகிறது . குருவின் பின்னே செல்கிறார் . குருவும் அவரை ஈசனை பாடவும் திருப்பெருந்துறை கோவிலை புனருத்தாரணம் செய்யவும் பணிக்கிறார் . வாதவூரரும் அவ்வாறே சிவபுராணம் பாடுகிறார் . குருவும் மெய்மறந்து ரசித்து இனி நீ மாணிக்கவாசகர் என்று அழைக்கப் படுவாய் என்று ஆசி கூறுகிறார் . வாதவூரர் இவ்வாறு மாணிக்கவாசகர் ஆகிறார் .
No comments:
Post a Comment