Friday, 3 July 2015

manivasakar

வாதவூரர்  தமிழக  கீழ்கடற்கரையை  நோக்கி  புறப்பட்டார் . அவர்  மனம் மட்டும்  நல்ல  குருவை  தேடிய  வன்ணமே அலைந்து  கொண்டு  இருந்தது .ஈசன்  தன்  விளையாடலை  தொடங்குகிறார் . வாதவூரர்  வழியில்  திருப்பெருந்துறையை  அடைகிறார் . அங்கு  ஒரு குருந்தை  மரத்தடியில்  ஒரு  சிவனடியார்  தன்  சிஷயர்கள்  புடை  சூழ  அமைந்திருப்பதை  காண்கிறார் . அவரை  கண்ட  மாத்திரத்திலேயே வாதவூரர்  மனம்  சிலிர்க்கிறது . ஓடி  சென்று  அவர்  காலடியில்  வீழ்கிறார் . அவரும்  வாதவூரரை  ஆசீர்வதித்து  பாததீக்ஷை  வழங்குகிறார் . வதவூரரும்  அளவிலா  ஆனந்தம்  அடைகிறார் .அவ்வளவே . அவர் தன்னை  மறக்கிறார் . தான்  அமைச்சர்  தன்  கடமைகள்  எல்லாம்  மறந்து  விடுகிறது . குருவின்    பின்னே  செல்கிறார் . குருவும்  அவரை  ஈசனை  பாடவும் திருப்பெருந்துறை  கோவிலை  புனருத்தாரணம்  செய்யவும்  பணிக்கிறார் . வாதவூரரும்  அவ்வாறே  சிவபுராணம்  பாடுகிறார் . குருவும்  மெய்மறந்து  ரசித்து  இனி  நீ  மாணிக்கவாசகர்   என்று  அழைக்கப் படுவாய்  என்று  ஆசி  கூறுகிறார் . வாதவூரர்  இவ்வாறு  மாணிக்கவாசகர்  ஆகிறார் . 

No comments:

Post a Comment