கூலி ஆளாக வந்தியின் சார்பில் வந்த ஈசன் தானும் ஒரு வேலையும் செய்யாமல் மற்றவரையும் வேலை செய்யவிடாமல் கூத்தாடுகிறார் .இதைக்கண்ட சேவகன் அரசனிடம் சென்று முறை இடுகிறான் . அரசன் வெகுண்டு அவனை இழுத்து வருமாறு ஆணை இடுகிறார் .இதனிடையில் மணிவாசகரும் மக் களுக்கு ஏற்பட்ட அவதியை கேள்வியுற்று மிக மன வேதனை அடைகிறார் .ஈசனை பிரார்த்திக்கிறார் . அரசன் கூலி ஆளாக வந்த ஈசனை கடுமையாக விசாரிக்கிறார் . அவருடைய பதில்களால் மேலும் கோபமுற்று பிரம்பால் ஈசனை அடிக்கிறார் . ஆனால் பிரம்படி மன்னன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகள் முதுகிலும் விழ அரசன் அதிர்ந்து போகிறான் .உடனே ஈசன் கரைதானே அடைபடவேண்டும் . நானே அடைக்கிறேன் என்று சொல்லி ஒரு பிடி மணலை எடுத்து போட கரை அடைபடுகிறது . உடனே ஈசன் மாணிக்கவாசகர் என்று எம்மால் பெயர் சூட்டப்பட்ட எம் பக்தனை இவ்வாறு கொடுமை செய்வதை பொறுக்காமல் யாமே இத்திருவிளையாடல் புரிந்தோம் . இனியாவது அவரது பெருமையை உணருங்கள் என்று சொல்லி மறைந்தார்
No comments:
Post a Comment