Thursday, 16 July 2015

cont 7

கூலி  ஆளாக  வந்தியின்  சார்பில்  வந்த  ஈசன்  தானும்  ஒரு  வேலையும்  செய்யாமல்  மற்றவரையும்  வேலை  செய்யவிடாமல்  கூத்தாடுகிறார் .இதைக்கண்ட  சேவகன்  அரசனிடம்  சென்று  முறை  இடுகிறான் . அரசன்  வெகுண்டு  அவனை  இழுத்து  வருமாறு  ஆணை  இடுகிறார் .இதனிடையில்  மணிவாசகரும்  மக் களுக்கு  ஏற்பட்ட  அவதியை  கேள்வியுற்று  மிக  மன  வேதனை  அடைகிறார் .ஈசனை  பிரார்த்திக்கிறார் . அரசன்  கூலி  ஆளாக  வந்த  ஈசனை  கடுமையாக  விசாரிக்கிறார் . அவருடைய  பதில்களால்  மேலும்  கோபமுற்று  பிரம்பால்  ஈசனை  அடிக்கிறார் . ஆனால்  பிரம்படி மன்னன்  உள்ளிட்ட  அனைத்து  ஜீவராசிகள்  முதுகிலும்  விழ  அரசன்  அதிர்ந்து  போகிறான் .உடனே  ஈசன்  கரைதானே  அடைபடவேண்டும் .  நானே  அடைக்கிறேன்  என்று  சொல்லி  ஒரு  பிடி  மணலை  எடுத்து  போட  கரை  அடைபடுகிறது . உடனே  ஈசன்  மாணிக்கவாசகர் என்று  எம்மால்  பெயர்  சூட்டப்பட்ட  எம் பக்தனை  இவ்வாறு  கொடுமை  செய்வதை  பொறுக்காமல்  யாமே  இத்திருவிளையாடல்  புரிந்தோம் . இனியாவது  அவரது  பெருமையை  உணருங்கள்  என்று  சொல்லி  மறைந்தார்  

No comments:

Post a Comment