Friday, 10 July 2015

manivasakar cont

நள்ளிரவு  ஆனதும்  நரிகள்  தங்கள்  சுயரூபம்  அடைந்தன .அவை  அங்கு  இருந்த  குதிரைகளை  கடித்து  குதறிவிட்டு  ஊருக்குள்  ஓடி  ஜனங்களை  அச்சுறித்தன .மன்னனுக்கு  செய்தி  சென்றது . மன்னன்  கடும்  கோபம்கொண்டு  வாதவூரரை  கடும்  சித்திரவதை  செய்ய  கட்டளை  இட்டான் .வறண்டு  கிடந்த  வைகை  மணலில்  அவரை  நிற்க  வைத்து  தலையில்  பெரும்  பாறை  ஏற்றி  கைகால்  கட்டி  நிற்க  வைத்து  சித்திரவதை  செய்தனர் . கொதிக்கும்  மணலில்  தலையில்  பாரத்துடன்  அவர்  அவதிப்படுவதை  கண்டு  மகிழ்ந்தனர் . ஆனால்  மாணிக்கவாசகரோ  எவ்வித  உணர்வும்  இன்றி  பஞ்சாக்ஷரம்  ஓதியபடி  அமைதியாக  இருந்தார் .  

No comments:

Post a Comment