நள்ளிரவு ஆனதும் நரிகள் தங்கள் சுயரூபம் அடைந்தன .அவை அங்கு இருந்த குதிரைகளை கடித்து குதறிவிட்டு ஊருக்குள் ஓடி ஜனங்களை அச்சுறித்தன .மன்னனுக்கு செய்தி சென்றது . மன்னன் கடும் கோபம்கொண்டு வாதவூரரை கடும் சித்திரவதை செய்ய கட்டளை இட்டான் .வறண்டு கிடந்த வைகை மணலில் அவரை நிற்க வைத்து தலையில் பெரும் பாறை ஏற்றி கைகால் கட்டி நிற்க வைத்து சித்திரவதை செய்தனர் . கொதிக்கும் மணலில் தலையில் பாரத்துடன் அவர் அவதிப்படுவதை கண்டு மகிழ்ந்தனர் . ஆனால் மாணிக்கவாசகரோ எவ்வித உணர்வும் இன்றி பஞ்சாக்ஷரம் ஓதியபடி அமைதியாக இருந்தார் .
No comments:
Post a Comment