Tuesday, 21 July 2015

manivasagar8

தன தவறை  உணர்ந்து  மிக்க  அதிர்ச்சி  அடைந்த  அரிமர்தன  பாண்டியன்  மாணிக்கவாசகரை  தேடி  ஓடி  சென்று  அவர்  கால்களில்  வீழ்ந்து  மன்னிப்பு  கோருகிறான் . மாணிகவாசகரும்  பெருந்தன்மையுடன்  எல்லாம்  ஈசன்  திருவிளையாடல் ,ஆதலால்  வருந்தவேண்டாம்  தனக்கு  அவர்மீது  வருத்தம்  ஏதும்  இல்லை  என்று  சொல்லி  தேற்றினார் . அரசன் அவரை மீண்டும்  அமைச்சராக   வருமாறு  அழைத்தார் . ஆனால்  அவர்  தனக்கு  பதவியில்  நாட்டமில்லை  என்றும்  பல  சிவாலயங்களுக்கு  சென்று  ஈசனை  மனமுருக  பாடுவதையே  தம்  மனம்  விரும்பி நாடுவதாகவும் , தனக்கு  விடை  கொடுக்குமாறு  கோருகிறார் . அரசனும்  அதை  தடுக்க  மனமில்லாமல்  விடை  கொடுக்கிறார் . மாணிக்கவாசகரும்  தன்  புனித  பயணத்தை  தொடங்குகிறார் . தமிழுலகத்திற்கு  திருவாசகம்  எனும் விலை  மதிக்க  முடியாத  பொக்கிஷத்தை  அடையும்  பேறு  கிடைக்கிறது .   

No comments:

Post a Comment