தன தவறை உணர்ந்து மிக்க அதிர்ச்சி அடைந்த அரிமர்தன பாண்டியன் மாணிக்கவாசகரை தேடி ஓடி சென்று அவர் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கோருகிறான் . மாணிகவாசகரும் பெருந்தன்மையுடன் எல்லாம் ஈசன் திருவிளையாடல் ,ஆதலால் வருந்தவேண்டாம் தனக்கு அவர்மீது வருத்தம் ஏதும் இல்லை என்று சொல்லி தேற்றினார் . அரசன் அவரை மீண்டும் அமைச்சராக வருமாறு அழைத்தார் . ஆனால் அவர் தனக்கு பதவியில் நாட்டமில்லை என்றும் பல சிவாலயங்களுக்கு சென்று ஈசனை மனமுருக பாடுவதையே தம் மனம் விரும்பி நாடுவதாகவும் , தனக்கு விடை கொடுக்குமாறு கோருகிறார் . அரசனும் அதை தடுக்க மனமில்லாமல் விடை கொடுக்கிறார் . மாணிக்கவாசகரும் தன் புனித பயணத்தை தொடங்குகிறார் . தமிழுலகத்திற்கு திருவாசகம் எனும் விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை அடையும் பேறு கிடைக்கிறது .
No comments:
Post a Comment