Tuesday, 14 July 2015

cont.6

ஈசன்  வந்தி  கிழவியிடம்  கூலியாக  என்ன  தருவாய் ? என  வினவுகிறார் . அதற்கு  அவள்  தன்னிடம்  வேறு  என்ன  உள்ளது  அவள்  செய்யும்  பிட்டில்  உதிர்வதை  உனக்கு  கொடுக்கிறேன்  என்று  கூறினாள் . அன்று  அவள்  செய்த  மொத்த  பிட்டும்  உதிர்ந்து  விட்டது . அவளும்  மகிழ்ச்சியுடன்  அத்தனையும்  கொடுத்தாள் . மீதம்  இருந்தால்  அவள்  அதை  விற்று  அதனால்  அவளுக்கு  மீண்டும்  வினை  சேரும் . அதன்  பயனை  கழிக்க  இப்புவியில்  இன்னும்  சிறிது  காலம்  வாழ  வேண்டியதாகிவிடும்  என்பதால்  அன்பே  உருவான  ஈசன்  அவ்வாறு  செய்கிறான் .அவன்  கருனைதான்  என்னவென்பது ? அவளை  தன்னிடம்  சேர்த்தும்  கொள்கிறான் . அவருடைய  விளையாடல்  தொடர்கிறது . அவர்  கரையை  அடைக்கும்  பணி  நடந்து  கொண்டிருக்கும்  இடத்தை  அடைகிறார் .

No comments:

Post a Comment