Monday, 29 June 2015

vadavurar

அரிமர்த்தன  பாண்டியன்  வாத வூரரை மதுரைக்கு  வரவழைத்து  தன்  விருப்பத்தை  முக்கியஸ்தர்களுக்கு  சொல்லி    வாதவூரரை  சபைக்கு  அறிமுகப்படுத்துனார் . அவர்களும்  வாதவூரரின்  அறிவுத்திறன்  கண்டு  மகிழ்ந்தனர் .  அரசனும்  அவரை  தன்  பிரதான  மந்திரி  ஆக்கிக்கொள்கிறார் . வாதவூரரின்  மனதில்  அந்த  "தேடல் '' இருந்துகொண்டே  இருந்தாலும்  தன்  கடமைகளை  சரிவர  செய்து  கொண்டிருந்தார் . அப்போது  பாண்டியர்  படை  பலத்தை  கண்காணித்த  படை  தலைவன்  குதிரை  படையை  பலப்படுத்த  வேண்டியது  அவசியம்  என்று  தெரிவித்தார் .அரசனும்   குதிரைகள்  வாங்கும்  பொறுப்பை  வாதவூரரிடம்  ஒப்படைக்கிறார் .  அவரும்  வேண்டிய  திரவ்யங்களுடன்  குதிரை  வாங்க  புறப்படுகிறார் .  

No comments:

Post a Comment