Thursday, 31 January 2019

வாகீசப்பெருமானும்    சம்பந்தப்பெருமானும்   அக்காசுகளைக்கொண்டு   பொருள்களை   வாங்கி   உணவு   தயாரித்து   மக்களுக்கு   வழங்கி   அவர்கள்   பசியாறுவதை   கண்டு   ஆனந்தப்பட்டனர் .  ஆனால்   வாகீசர்   மடத்தில்   வெகு   விரைவிலேயே   உணவு   தயாராகி   மக்கள்   பசியாற   வழங்கப்பட்டது .  ஆனால்   சம்பந்தர்   மடத்தில்   உணவு   தயாராக   அதிக   நேரம்   ஆயிற்று .   சம்பந்தர்   வருத்தமடைந்து   அதன்    காரணம்   வினவினார் .  அதற்கு   அவர் அடியார்கள்   வாகீசப்பெருமான்   அளிக்கும்   சுத்தமானது   என்றும்   சம்பந்தர்   அளிக்கும்   காசு   சிறிது   மாற்று   குறைவானது   என்றும்   அதை   சரியாக்க   நேரம்   பிடிப்பதாகவும்   விளக்கினர் .   வாகீசர்  உடலை   வருத்தி   உழவார   பணி   செய்து   ஐயன்   மனம்   குளிர   வைப்பதால்   அவருக்கு   மாசற்ற   பொன்   கிடைப்பதே  தகும்   என்று   மனம்   தேறி    ஐயனை     வேண்டி   'வாசி   தீரவே   காசு   நல்குவீர்   மாசின்   மிழலையீர் '          எனும்   பதிகம்   பாடி  'கறைகொள்  காசினை   முறைமை    ஆக்குவீர்     என்று   வேண்டி   மாசிலா   பொன்   பெற்று   சேவை   செய்து   மகிழ்கிறார் .

1 comment:

  1. Reading it regularly.In a simple language easy to understand by everyone.

    ReplyDelete