Friday, 25 January 2019

 புகலூரை   விட்டு   அப்பரும்   சம்பந்தரும்   சேர்ந்து   புறப்பட்டு   தங்கள்   யாத்திரையை   தொடர்ந்தனர் .  அப்பர்பெருமான்   நடந்து   வருகையில்   தான்   மட்டும்   சிவிகையில்   செல்ல   மனம்   வராமல்   சம்பந்தர்   தானும்   நடக்க   ஆரம்பித்தார் .  அதை   கண்டு   அப்பர்   ஈசன்   அளித்த   சிவிகை  இருக்கையில்   சிறுவராக   ஞான  பெருமான்   நடப்பது   தகாது   என்று   எடுத்து   உரைக்க   சம்பந்தர்   அப்படியானால்   தங்கள்   முதலில்   செல்லுங்கள் .  நான்   தங்களை   வந்து   சேர்ந்து   கொள்கிறேன் .  என்று   கூறி   சிறிது   நேரம்   தங்கிவிட்டு   நிலநக்கர் ,  முருகனார்   மற்றும்   சிறுத்தொண்டர்   யாரிடமும்   விடை   பெற்று   கொண்டு   கிளம்பி   சென்று   அப்பரை   சேர்ந்து   கொண்டு   இருவரும்   திருக்கடவூர்   சென்றனர் .  அங்கு   குங்கிலிய   கலைய   நாயனாரை   சந்தித்து   அவருடன்   உரையாடி   விட்டு   அவருடனேயே   அமுது   செய்து   விட்டு   அங்கிருந்து   திருவீழிமிழலை   சென்றனர் .

No comments:

Post a Comment