சம்பந்தரும் விடியற்காலை எழுந்து ஆலயம் சென்றார் . அங்கு அவருக்கு வியக்கத்தக்க வகையில் விமானத்தில் தோணியப்பராக காட்சி அளித்தார் மிழலை ஈசர் அதை கண்ட காழிப்பிள்ளையார் மெய் மறந்து அக்காட்சியை கண்டார் . ஈசன் பெரும்கருணை அவரை மெய் சிலிர்க்க வைத்தது . உள்ளம் குதூகலிக்க பதிகங்கள் பாடினார் . ஆலயத்திலிருந்து வந்து காழியிலிருந்து வந்த பெரியோர்களை சந்தித்து நடந்ததை கூறி அவர்களை திருப்பி அனுப்பினார் . அவர்களும் அதிசயித்தவர்களாக சீர்காழி திரும்பி சென்றனர் . மிழலையில் சிலகாலம் தங்க முடிவு செய்தார் சம்பந்தர் .
No comments:
Post a Comment