Monday, 28 January 2019

சம்பந்தரும்   விடியற்காலை   எழுந்து   ஆலயம்   சென்றார் .  அங்கு   அவருக்கு   வியக்கத்தக்க   வகையில்   விமானத்தில்   தோணியப்பராக   காட்சி   அளித்தார்  மிழலை   ஈசர்    அதை   கண்ட   காழிப்பிள்ளையார்   மெய்   மறந்து   அக்காட்சியை   கண்டார் .  ஈசன்   பெரும்கருணை   அவரை   மெய்   சிலிர்க்க   வைத்தது .  உள்ளம்   குதூகலிக்க   பதிகங்கள்   பாடினார் .   ஆலயத்திலிருந்து   வந்து    காழியிலிருந்து   வந்த   பெரியோர்களை   சந்தித்து   நடந்ததை   கூறி   அவர்களை   திருப்பி   அனுப்பினார் .  அவர்களும்   அதிசயித்தவர்களாக   சீர்காழி   திரும்பி   சென்றனர் .  மிழலையில்   சிலகாலம்   தங்க   முடிவு   செய்தார்   சம்பந்தர் .

No comments:

Post a Comment