Thursday, 17 January 2019

சம்பந்தர்   தன்னை   வைத்து   ஈசன்   ஆடிய   திருவிளையாட்டால்   மெய்சிலிர்த்து   போனார் .  மருகல்   ஈசனின்   கருணை   அவரை   மெய்யுருக   வைத்தது .  அவரை   சில   காலம்   அங்கேயே   தங்க   வைத்தது.   சிறுத்தொண்டர்   செங்காட்டங்குடி   அவர்   திரும்பாததால்   அவரே   சென்று   அவரை   அழைத்துவர   கிளம்பி   மருகல்   சென்று    அழைத்து   வந்தார் .   சம்பந்தர்   அங்கிருந்து   கணபதீச்சரம்   சென்று   எம்பெருமானை   சேவித்தார் .   அங்கு  அவருக்கு   மருகல்   ஆலயத்தில்   காட்சி     அளித்த   அதே   கோலத்தில்   காட்சி   தந்து   அவரை   சொல்லொணா   அதிசயத்தில்   ஆழ்த்தினார் .  பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் . 

No comments:

Post a Comment