ஆளுடையபிள்ளை அங்கிருந்து அடியார்களுடன் திருப்புகலூர் செல்ல எண்ணினார் . சிறுத்தொண்டர் அவரை ஊர் எல்லைவரை சென்று வழி அனுப்பினார் . அங்கு முருகனார் அவர்களை அன்புடன் வரவேற்று தம் மடத்திலேயே தங்க வைத்து உபசரித்தார் . அப்போது திருவாரூரிலிருந்து அப்பர்பெருமான் அங்கு தம் அடியார்களுடன் வருவது அறிந்தார் . சம்பந்தர் தாமே சென்று அவர் காலில் விழுந்து சேவித்து அழைத்துவர விருப்பம் கொண்டார் . எல்லைவரை சென்று அவரை அழைத்து வந்தார். இருவரும் பேசிக்கொள்ளும்போது அப்பர்பெருமான் ஆரூர் திருவாதிரை உத்சவத்தின் பெருமை 'முத்துவிதானம் ' எனும் பதிகத்தால் விளக்கினார் . அதை கேட்டு சம்பந்தருக்கும் அந்த வைபவத்தை காண ஆவல் உண்டாயிற்று . உடனே அவர் தீருவாரூர் புறப்பட்டு சென்றார் .
No comments:
Post a Comment