Thursday, 17 January 2019

ஆளுடையபிள்ளை   அங்கிருந்து   அடியார்களுடன்   திருப்புகலூர்   செல்ல   எண்ணினார் .  சிறுத்தொண்டர்   அவரை   ஊர்   எல்லைவரை   சென்று   வழி   அனுப்பினார் .  அங்கு   முருகனார்   அவர்களை   அன்புடன்    வரவேற்று   தம்    மடத்திலேயே   தங்க   வைத்து   உபசரித்தார் .    அப்போது   திருவாரூரிலிருந்து   அப்பர்பெருமான்   அங்கு   தம்   அடியார்களுடன்   வருவது   அறிந்தார் .   சம்பந்தர்   தாமே   சென்று     அவர்   காலில்   விழுந்து   சேவித்து   அழைத்துவர   விருப்பம்   கொண்டார் .  எல்லைவரை   சென்று   அவரை   அழைத்து   வந்தார்.  இருவரும்   பேசிக்கொள்ளும்போது   அப்பர்பெருமான்   ஆரூர்   திருவாதிரை   உத்சவத்தின்   பெருமை   'முத்துவிதானம் '   எனும்   பதிகத்தால்   விளக்கினார் .    அதை   கேட்டு   சம்பந்தருக்கும்   அந்த   வைபவத்தை   காண   ஆவல்   உண்டாயிற்று .  உடனே   அவர்   தீருவாரூர்   புறப்பட்டு   சென்றார் .

No comments:

Post a Comment