Tuesday, 22 January 2019

காழிப்பிள்ளை   புகலூரிலிருந்து   புறப்பட்டு   சில   க்ஷே த்திரங்களை   சேவித்துக்கொண்டு   ஆரூரை   நெருங்கினார்.  தூரத்திலிருந்து   கோபுரத்தை   கண்டதுமே   அவர்   தேகம்   புல்லரித்தது .  தரையில்   விழுந்து   சாஷ்டாங்கமாக   வணங்கினார் .  ஞானபாலுண்ட   பெருமானை   தரிசிக்க   மக்கள்   கூடி   பெரும்   வரவேற்பு    அளித்தனர் .  அவரும்   அங்கு   தங்கி   பதிகங்கள்   பாடி   ஈசனை   வணங்கி   மகிழ்ந்தார் .  அங்கிருந்தபடியே   அக்கம்   பக்கங்களிலுள்ள   க்ஷேத்திரங்களை   சேவித்து   திரும்பினார் .  பிறகு   ஆரூரை   விட்டு   புகலூர்   திருப்பினார் .  அப்போது   அங்கிருந்த   அப்பர் ஸ்வாமிகளும்   முருகனாரும்   அவரை   எதிர்கொண்டு   அழைத்து   மடத்திற்கு   திரும்பினர் .  அவர்   முருகனார்   மடத்தில்   இருந்தபோதே   நிலநக்கரும்   சிறுத்தொண்டரும்   அங்கு   விஜயம்   செய்து   அவர்களுடன்   சேர்ந்து   களித்தனர் .

No comments:

Post a Comment