காழிப்பிள்ளை புகலூரிலிருந்து புறப்பட்டு சில க்ஷே த்திரங்களை சேவித்துக்கொண்டு ஆரூரை நெருங்கினார். தூரத்திலிருந்து கோபுரத்தை கண்டதுமே அவர் தேகம் புல்லரித்தது . தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக வணங்கினார் . ஞானபாலுண்ட பெருமானை தரிசிக்க மக்கள் கூடி பெரும் வரவேற்பு அளித்தனர் . அவரும் அங்கு தங்கி பதிகங்கள் பாடி ஈசனை வணங்கி மகிழ்ந்தார் . அங்கிருந்தபடியே அக்கம் பக்கங்களிலுள்ள க்ஷேத்திரங்களை சேவித்து திரும்பினார் . பிறகு ஆரூரை விட்டு புகலூர் திருப்பினார் . அப்போது அங்கிருந்த அப்பர் ஸ்வாமிகளும் முருகனாரும் அவரை எதிர்கொண்டு அழைத்து மடத்திற்கு திரும்பினர் . அவர் முருகனார் மடத்தில் இருந்தபோதே நிலநக்கரும் சிறுத்தொண்டரும் அங்கு விஜயம் செய்து அவர்களுடன் சேர்ந்து களித்தனர் .
No comments:
Post a Comment