Wednesday, 30 January 2019

சம்பந்தப்பெருமான்   விழிமிழலையில்   சில   காலம்   தங்க   தீர்மானித்தார் .  அப்பர்பெருமானும்   மடத்தில்   வேறு   இடத்தில்   தங்கி   இருந்தார் .  இருவரும்   ஆலத் திற்கு    வந்து   இறைவனை   வணங்கி   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தனர் .  இவ்வாறு   இருக்கையில்    நாட்டில்   வறட்சி   ஏற்பட்டு  ஆறு  குளங்கள்   வற்றி   மக்கள்   உண்ண   உணவுக்கே   சிரமமாகி   கஷ்டப்பட்டனர் .  இதனால்   மனம்   மிக   வேதனை   அடைந்த   வாகீசரும்   சம்பந்தரும்   ஈசனிடம்   மனமுருகி   வேண்டினர் .       ஐயன்   அவர்கள்   கனவில்   தோன்றி   பீடத்தின்  கீழ்  பொற்காசுகள்  வைப்பதாகவும்   மேற்கு   பீடத்தில்   உள்ள   காசை   அப்பரும்   கிழக்கு   பீடத்தில்   உள்ளதை   சம்பந்தரும்   எடுத்துக்கொண்டு   உணவு   பொருள்களை   வாங்கி   பஞ்சம்   தீரும்வரை   மக்களுக்கு   உணவு   அளிக்குமாறு   கூறினார் .  அவ்வாறே   இருவரும்   காலையில்   பொற்காசை   கண்டு   மகிழ்ச்சியுடன்   தங்கள்   சேவையை   தொடங்கினர் .

No comments:

Post a Comment