சம்பந்தப்பெருமான் விழிமிழலையில் சில காலம் தங்க தீர்மானித்தார் . அப்பர்பெருமானும் மடத்தில் வேறு இடத்தில் தங்கி இருந்தார் . இருவரும் ஆலத் திற்கு வந்து இறைவனை வணங்கி பதிகங்கள் பாடி மகிழ்ந்தனர் . இவ்வாறு இருக்கையில் நாட்டில் வறட்சி ஏற்பட்டு ஆறு குளங்கள் வற்றி மக்கள் உண்ண உணவுக்கே சிரமமாகி கஷ்டப்பட்டனர் . இதனால் மனம் மிக வேதனை அடைந்த வாகீசரும் சம்பந்தரும் ஈசனிடம் மனமுருகி வேண்டினர் . ஐயன் அவர்கள் கனவில் தோன்றி பீடத்தின் கீழ் பொற்காசுகள் வைப்பதாகவும் மேற்கு பீடத்தில் உள்ள காசை அப்பரும் கிழக்கு பீடத்தில் உள்ளதை சம்பந்தரும் எடுத்துக்கொண்டு உணவு பொருள்களை வாங்கி பஞ்சம் தீரும்வரை மக்களுக்கு உணவு அளிக்குமாறு கூறினார் . அவ்வாறே இருவரும் காலையில் பொற்காசை கண்டு மகிழ்ச்சியுடன் தங்கள் சேவையை தொடங்கினர் .
No comments:
Post a Comment