Saturday, 26 January 2019

திருவீழிமிழலையில்  மடத்தில்  வாகீசரும்    சம்பந்தரும்   வெவ்வேறு   இடங்களில்   தங்கி   இருவரும்   நாள்தோறும்   ஆலயம்   சென்று   எம்பெருமானை   வழிப்பட்டு   வந்தனர் .   இவ்வாறு   இருக்கையில்     சீர்காழியிலிருந்து   சில   பெரியோர்கள்   வந்து   சம்பந்தப்பெருமானை   ஊருக்கு   வரும்படி  அழைத்தனர் .   காழிப்பிள்ளை  அவர்களை   இரவு   மடத்தில்   தங்க  சொல்லி   காலை   ஐயனிடம்   விடை   பெற்று   கொண்டு வருவதாக      சொன்னார் .  அவர்களும்   அவ்வாறே   செய்வதாக    கூறி   சென்றனர் .    மிழலை   ஈசன்   அவரை   அனுப்ப   மனமில்லாமல்   அவருடைய   தேனினும்   இனிக்கும்   பாக்களை   மேலும்   சுவைக்க   எண்ணியோ   என்னவோ   அவர்   கனவில்   தோன்றி   குழந்தாய்   தோணியப்பரை   காண   நீ   அத்தனை   தூரம்   செல்ல   தேவை   இல்லை .  நாளை   யாமே   விமானத்தில்   அக்கோலத்தை   காட்டுவோம் '  என்று   சொல்லி    மறைந்தார் 

No comments:

Post a Comment