Friday, 4 January 2019

சம்பந்த பெருமான்   மடத்திற்கு   வந்து   கதறி   அழும்   அப்பெண்ணை   அணுகி   இவ்வாறு   கதறி   அழுவதன்   காரணம்   வினவினார்.  தெய்வீகம்  பொருந்திய   அம்முகத்தை   கண்ட   அப்பெண்   கதறிக்கொண்டே   அவர்   காலடியில்   வீழ்ந்தாள் .   ''  ஸ்வாமி   நான்   வைப்புரில்   வசிப்பவள் .  என்   தந்தை   அவ்வூர்   தலைவர் .   மிகுந்த   வசதி   படைத்தவர்    அவருக்கு   நாங்கள்   ஏழு   பெண்கள்.   இங்கு     சவமாக  கிடப்பவர்   எங்கள்   முறை   மாமன்   இவருக்கு   தன்   பெண்ணை   மணமுடித்து     வைப்பதாக   என்   தந்தை   வாக்களித்து   இருந்தார்   ஆனால்  தன்   அந்தஸ்து   காரணமாக   என்   தந்தை   கொடுத்த    வாக்கை   மீறி   தன்   ஆறு   பெண்களையும்   வேறு   சம   அந்தஸ்து   உள்ள   வரங்களை   தேடி   மணமுடித்து   விட்டார் .  நான்   ஏழாவது   மகள் .  எனக்கு   இவருக்கு   இழைக்கப்பட்ட   அநியாயத்தை   காண  பொறுக்கவில்லை .  ஆகையால்   இவரையே   மணப்பது   என்று   தீர்மானித்து   வீட்டில்   சொல்லாமல்   மருகல்   ஈசன்  முன்   மணமுடித்து       கொள்ள   எண்ணி     புறப்பட்டோம் .   

No comments:

Post a Comment