அவளுடைய கதையை கேட்ட சம்பந்தர் மனம் பாகாய் உருகியது . ஈசன் மீது இத்தனை நம்பிக்கை வைத்து வந்த இவர்களுக்கு இத்தகைய சோதனையா ? என்று அவருக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று . மருகல் ஐயனை மனமுருக தியானித்து '' சடையா எனும் மால் சரண் நீ எனும் மால் '' எனும் பதிகத்தை பாடினார் . அவர் பாடப்பாட அப்பையன் தலையிலிருந்து விஷம் இறங்க ஆரம்பித்தது . அப்பதிகம் முடிவதற்குள் விஷம் முழுவதும் இறங்கி அவ ன் தூக்கத்திலிருந்து வீழி த்ததுபோல் விழித்து கொண்டான் .. அப்பெண்ணின் ஆனந்தத்திற்கு அளவேது ? அவன் தன்னை சுற்றி இத்தனை பேர் நிற்பதையும் மஹா தேஜசுடன் பாலகன் நிற்பதை கண்டு எழுந்து சம்பந்தர் காலில் விழுந்தான் .
No comments:
Post a Comment