Thursday, 30 August 2018

அத்தனை   மன   வேதனையிலும்   அத்தம்பதியர்க்கு   நாவுக்கரசருக்கு   அமுது   படைப்பது   நிறுத்துவது   மனம்   ஒப்பவில்லை .   அவர்கள்   பெருத்த   மன   வேதனையுடன்   அருமை   மகனின்   உடலை   ஒரு   அறையில்   படுக்கவைத்து   அறையை   மூடிவிட்டு   நாவுக்கரசரை   ஆலயத்திலிருந்து   அமுது   படைக்க   அழைத்து   வந்தார் .  நாவுக்கரசர்   வாசலில்   வந்ததும்   அங்கு  எதோ   அசம்பாவிதம்   நேர்ந்திருப்பதை   உள்ளம்   உணர்த்தியது .  அவர்   திருநீறு   எடுத்து   எல்லோருக்கும்   கொடுக்க   முதலில்   நாவுக்கரசனை   அழைத்தார் .  அப்பூதியடிகள்   துக்கத்த்தை   மறைத்து   கொண்டு   அவன்   இப்போது   எதற்கும்   உதவ   மாட்டான் .  என்று   பூடகமாக   உணர்த்தினார் .  அப்பரடிகள்   வற்புறுத்தி   கேட்டதும்   நடந்த   உண்மையை   கூறினார் .   அதிர்ந்த   அப்பரடிகள்    உடனே   நாவுக்கரசனை   தூக்கிக்கொண்டு   ஆலயத்தில்   கிடத்த  செய்தார்.   திங்களூர்   ஈசனை   மனமுருக   பதிகங்களால்  தொழுது   மகனை   உயிர்ப்பிக்க   வேண்டினார் . அப்பரடிகள்   வேண்டி   கேட்டுக்கொண்டால்   ஐயன்   மறுப்பாரா ?  மறுகணமே   நாவுக்கரசன்   துக்கத்திலிருந்து   விழித்தார்  போல்     எழுந்து   அம்மா   என்று  ஓடிவந்தான் .  பெற்றோர்களின்   ஆனந்தத்திற்கு  அளவேது .

No comments:

Post a Comment