Wednesday, 29 August 2018

அளவிட   முடியாத   ஆனந்தம்   அடைந்த   அப்பூதி  அடிகளும்    அவர்   மனைவியும்   நாவுக்கரசரை   இருந்து   உணவு   அருந்திவிட்டு   செல்லவேண்டுமென்று   வருந்தி   கேட்டுக்கொண்டனர் .  அவரும்   கோயிலுக்கு   சென்று   இறைவனை   சேவித்துவிட்டு   வந்து   உணவு   அருந்துவதாக   கூறிவிட்டு   சென்றார் .   தம்பதியரும்   மிக்க   மகிழ்ச்சியுடன்   உணவு   தயாரிக்க   முனைந்தனர் .  அப்போது   விதி   விளையாடியது .  அன்னை   மகன்   நாவுக்கரசனை   தோட்டத்திலிருந்து   வாழை   இலை   வெட்டி   எடுத்துவர   கத்தியுடன்   அனுப்பினாள் .  பையனும்   தோட்டத்தில்   வாழை   இலை   வெட்ட  சென்றான் .  மரத்தில்   பதுங்கி  இருந்த   பாம்பு   ஒன்று   கத்திவழியாக   இறங்கி   பையனின்  கையில்   கொத்திவிட்டு   மறைந்தது .  நாவுக்கரசனும  கத்திக்கொண்டு   கீழே   விழுந்து   மாண்டு   போனான் .  இதை  கண்ட   அடிகளும்   அவர்   மனைவியும்  மிக்க   வேதனையும்   அதிர்ச்சியும்   தாளாமல்  மலைத்து   நின்றனர்.

No comments:

Post a Comment