Wednesday, 1 August 2018

திரும்பி   வீடு   வந்த   பரமதத்தன்   மனைவியை   தான்   கொடுத்து   சென்ற   மாங்கனியை   கொண்டுவரும்படி   கூறினான் .  புனிதவதியும்   அவ்வாறே   இருந்த   ஒரு   மாங்கனியை   கொண்டுவந்து   கொடுத்தாள் .  அதை    உண்ட   அவன்    அதன்   ருசியில்   மயங்கி   தான்   கொடுத்த   மறறொரு   கனியையும்   கேட்டான் .  திடுக்கிட்ட   புனிதா   என்ன   சொல்வது   என்று   அறியாமல்   சிவபெருமானிடம்   சரணடைந்தாள் .  பழத்தை   பிக்ஷையாக   கொடுத்ததை   எப்படி   சொல்வது   என்று   தயங்கி   ஐயனிடம்   முறையிட்டாள் .  உடனே   அவள்   கையில்   ஒரு   பழம்   இருந்ததை   கண்டு   ஈசனின்   கருணையை   கண்டு   மனமுருகி   அதை   கொண்டுபோய்   கணவனிடம்   கொடுத்தாள் .   அதை    உண்ட   அவன்     பேராச்சர்யம்   அடைந்தான்     அதன்   சுவை   முன்னதைவிட   மிக   உயர்ந்ததாக   இருக்க   அதன்   காரணத்தை   வினவினான்   அவளும்  வேறு   வழியின்றி   நடந்ததை   கூறினாள் .  அவனால்   அதை   நம்ப   முடியவில்லை .

No comments:

Post a Comment