திரும்பி வீடு வந்த பரமதத்தன் மனைவியை தான் கொடுத்து சென்ற மாங்கனியை கொண்டுவரும்படி கூறினான் . புனிதவதியும் அவ்வாறே இருந்த ஒரு மாங்கனியை கொண்டுவந்து கொடுத்தாள் . அதை உண்ட அவன் அதன் ருசியில் மயங்கி தான் கொடுத்த மறறொரு கனியையும் கேட்டான் . திடுக்கிட்ட புனிதா என்ன சொல்வது என்று அறியாமல் சிவபெருமானிடம் சரணடைந்தாள் . பழத்தை பிக்ஷையாக கொடுத்ததை எப்படி சொல்வது என்று தயங்கி ஐயனிடம் முறையிட்டாள் . உடனே அவள் கையில் ஒரு பழம் இருந்ததை கண்டு ஈசனின் கருணையை கண்டு மனமுருகி அதை கொண்டுபோய் கணவனிடம் கொடுத்தாள் . அதை உண்ட அவன் பேராச்சர்யம் அடைந்தான் அதன் சுவை முன்னதைவிட மிக உயர்ந்ததாக இருக்க அதன் காரணத்தை வினவினான் அவளும் வேறு வழியின்றி நடந்ததை கூறினாள் . அவனால் அதை நம்ப முடியவில்லை .
No comments:
Post a Comment