Friday, 10 August 2018

ஒருநம்பி   அப்பூதி  அடியார்க்கு   அடியேன்  |
  திங்களூர்   எனுமிடத்தில்   அப்பூதி   அடிகள்  என்னும்   அந்தணர்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர் .  சிவனடியார்களை   மிகவும்   போற்றி   வந்தார் .  அதிலும்   சமணர்களின்   போதனையால்  அறிவிழந்து   மன்னன்   திருநாவுக்கரசருக்கு   இழைத்த   அளவிலா   கொடுமைகளையும்   அவற்றிலிருந்து   கருணைக்கடலான   சிவபெருமானால்   காக்க   பட்ட   சம்பவங்களை   கேட்டறிந்தது   முதல்  அவர் மீது   அளவிலா   பக்தி   உண்டாயிற்று .   அவர்    சொல்லே   இவர்க்கு   வேதம் .  அவருடைய   சேவைகளும்   அடியார்களுக்கு  தொண்டு   செய்வதன்   மூலம்    சிவபெருமானை    பெரிதும்   மகிழ்விக்கலாம்   எனும்    அவரது   கூற்றை தெய்வ   வாக்காக   மதித்தார் .  ஆகையால்   இவரும்   இறைவனுடைய    அடியார்களுக்கு   சேவை   செய்வதையே   லட்சியமாக     கொண்டார் .  பல   தண்ணீர்   பந்தல்கள்   அன்ன   சத்திரங்கள் ,  அமைப்பதையே   தன் முதற் பணியாக   கொண்டு   அதற்கே     தன்   செல்வத்தை  செலவழித்து   வந்தார் .  அவை   யாவற்றிற்கும்   திருநாவுக்கரசர்   பெயரையே   வைத்தார் .

No comments:

Post a Comment