நாவுக்கரசர் அப்பூதியடிகளை தேடிக்கொண்டு அக்கிரகாரம் வந்து அவர் வீடு நாடி வந்தார் . அப்பூதியடிகள் அவரை அன்புடன் வரவேற்று அவர் வந்த காரணத்தை வினவினார் , அப்பர் அப்பூதியடிகளை தேடி வந்ததாகவும் தனக்கு ஒரு சந்தேகம் என்றும் கூறினார் . அதற்கு அவர் தான்தான் அப்பூதியடிகள் என்றும் அவருடைய சந்தேகம் யாது ? என்றும் வினவினார். அதற்கு அப்பர்பெருமான் இத்தனை தர்ம காரியங்களை செய்தவர் அவைகளுக்கு தன்னுடைய பெயரை வைத்து கொள்ளாமல் யாரோ ஒருவருடைய பெயரை வைக்க காரணம் என்ன என்று வினவினார் . அதற்கு அடிகள் உணர்ச்சியுடன் யாரையோ என்று என்று அப்பர்பெருமானையா குறிப்பிடுகிறீர்கள் ? அவரைவிட வேறு தகுதியான பெரியவர் வேறு யார் உளர் ? எத்தனை மாபெரும் சோதனைகளிலிருந்து சிவபெருமான் அவரை காத்து அருளினார் .
No comments:
Post a Comment