Wednesday, 15 August 2018

நாவுக்கரசர்   அப்பூதியடிகளை   தேடிக்கொண்டு   அக்கிரகாரம்   வந்து   அவர்   வீடு   நாடி   வந்தார் .  அப்பூதியடிகள்   அவரை   அன்புடன்   வரவேற்று   அவர்   வந்த   காரணத்தை   வினவினார் ,  அப்பர்  அப்பூதியடிகளை   தேடி   வந்ததாகவும்   தனக்கு   ஒரு   சந்தேகம்   என்றும்   கூறினார் .  அதற்கு   அவர்   தான்தான்   அப்பூதியடிகள்   என்றும்   அவருடைய   சந்தேகம்   யாது ?  என்றும்   வினவினார்.  அதற்கு    அப்பர்பெருமான்   இத்தனை   தர்ம   காரியங்களை   செய்தவர்   அவைகளுக்கு   தன்னுடைய   பெயரை   வைத்து   கொள்ளாமல்   யாரோ   ஒருவருடைய      பெயரை   வைக்க   காரணம்   என்ன  என்று   வினவினார் .  அதற்கு   அடிகள்   உணர்ச்சியுடன்   யாரையோ   என்று    என்று   அப்பர்பெருமானையா    குறிப்பிடுகிறீர்கள் ?   அவரைவிட   வேறு   தகுதியான  பெரியவர்   வேறு   யார்   உளர் ?  எத்தனை   மாபெரும்    சோதனைகளிலிருந்து   சிவபெருமான்  அவரை   காத்து   அருளினார் .

No comments:

Post a Comment