Friday, 3 August 2018

 பாண்டிய  நாட்டில்   பரமதத்தனின்   வியாபாரம்   செழித்து   ஓங்கியது .    பெரும்   செல்வந்தனானான் .  அங்கு   ஒரு   பெண்ணை   மணந்து   கொண்டு   ஒரு   பெண்  குழந்தைக்கு   தந்தையானான் .  அப்பெண்ணிற்கு   தான்   தெய்வமாக   மதித்த   தன்   முதல்   மனைவி   புனிதவதியின்   பெயரையே   சூட்டினான் .   வருடங்க  ள்   ஓடின .  காரைக்காலில்   புனிதவதி   கணவன்   வருவான்   என்ற   நம்ப க்கையோடு   காத்திருந்தாள்   வருடங்கள்   ஓட   அவள்   நம்பிக்கை   குறைந்தது .  அப்போது   பாண்டிய   நாட்டில்   அவனை   சந்தித்த   சிலர்  மூலம்    அவன்   பாண்டிய   நாட்டில்   இருப்பது   புனிதாவின்   குடும்பத்திற்கு   தெரியவந்தது .  உடனே   புனிதவதியின்   பெற்றோர்   மிகுந்த   சீர்வரிசைகளுடன்   புனிதவதியை   பல்லக்கில்   ஏற்றிக்கொண்டு   அவனிருக்குமிடம்   புறப்பட்டனர் .  தெய்வத்துக்கு   சமமான   அவள்   தன்னை   தேடி   வருவது   தகாது   என்று   பரமதத்தன்   தன்   மனைவி   குழந்தையுடன்   அவள்  இருக்குமிடம்      வந்து   மனைவி   குழந்தையுடன்   அவள் காலில்   விழுந்து   நமஸ்கரித்தா ன்  .  புனிதவதியும்    மற்றவர்களும்   அதிர்ச்சி   அடைந்தார்கள் .  பரமதத்தன்   அவள்  வணங்க   தக்கவள்   என்பதை   உணர்த்தி   தன்   பெண்ணுக்கு   அவள்   திருநாமத்தையே   சூடி   இருப்பதையும்   விளக்கினான் .

No comments:

Post a Comment