பாண்டிய நாட்டில் பரமதத்தனின் வியாபாரம் செழித்து ஓங்கியது . பெரும் செல்வந்தனானான் . அங்கு ஒரு பெண்ணை மணந்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானான் . அப்பெண்ணிற்கு தான் தெய்வமாக மதித்த தன் முதல் மனைவி புனிதவதியின் பெயரையே சூட்டினான் . வருடங்க ள் ஓடின . காரைக்காலில் புனிதவதி கணவன் வருவான் என்ற நம்ப க்கையோடு காத்திருந்தாள் வருடங்கள் ஓட அவள் நம்பிக்கை குறைந்தது . அப்போது பாண்டிய நாட்டில் அவனை சந்தித்த சிலர் மூலம் அவன் பாண்டிய நாட்டில் இருப்பது புனிதாவின் குடும்பத்திற்கு தெரியவந்தது . உடனே புனிதவதியின் பெற்றோர் மிகுந்த சீர்வரிசைகளுடன் புனிதவதியை பல்லக்கில் ஏற்றிக்கொண்டு அவனிருக்குமிடம் புறப்பட்டனர் . தெய்வத்துக்கு சமமான அவள் தன்னை தேடி வருவது தகாது என்று பரமதத்தன் தன் மனைவி குழந்தையுடன் அவள் இருக்குமிடம் வந்து மனைவி குழந்தையுடன் அவள் காலில் விழுந்து நமஸ்கரித்தா ன் . புனிதவதியும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள் . பரமதத்தன் அவள் வணங்க தக்கவள் என்பதை உணர்த்தி தன் பெண்ணுக்கு அவள் திருநாமத்தையே சூடி இருப்பதையும் விளக்கினான் .
No comments:
Post a Comment