நாவுக்கரசர் நல்லூரிலிருந்து புறப்பட்டு திருப்பழனம் செல்ல வழியில் திங்களூரை அடைந் தார் . அப்போது அவர் களைப்படைந்து இரு ந்தார் . அங்கு இருந்த தண்ணீர் பந்தலை கண்டதும் அங்கு சென்று தாக சாந்தி செய்து கொண்டு புறப்பட்டார் . வெளியே வந்ததும் முகப்பில் நாவுக்கரசர் தண்ணீர்பந்தல் என்ற பலகையை க ண்டதும் பக்கத்தில் இருப்பவர்களை இந்த பந்தலை அமைத்தவர் யார் என வினவினார் . அவர்கள் இதை அமைத்தவர் அப்பூதியடிகள் என்றும் அவர் அன்னதான சத்திரங்கள் போன்ற தர்ம காரியங்கள் பல செய்து இருப்பதாகவும் எல்லாவற்றிற்கும் அவர் நாவுக்கரசர் பெயரையே சூட்டி இருப்பதாகவும் கூறினர் . அப்பருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை . அவரை காணவேண்டும் என்ற ஆவல் எழ அவர் எங்கு இருக்கிறார் என விசாரித்தார் . அவர்கள் அவர் அக்கிரஹாரத்தில் வசிப்பதாக கூறினர்
No comments:
Post a Comment