Monday, 13 August 2018

நாவுக்கரசர்   நல்லூரிலிருந்து   புறப்பட்டு   திருப்பழனம்   செல்ல      வழியில்   திங்களூரை   அடைந் தார் .   அப்போது   அவர்   களைப்படைந்து   இரு ந்தார் .  அங்கு   இருந்த  தண்ணீர்   பந்தலை   கண்டதும்   அங்கு   சென்று   தாக சாந்தி   செய்து கொண்டு   புறப்பட்டார் .  வெளியே   வந்ததும்   முகப்பில்   நாவுக்கரசர்   தண்ணீர்பந்தல்   என்ற   பலகையை   க  ண்டதும்   பக்கத்தில்   இருப்பவர்களை   இந்த   பந்தலை   அமைத்தவர்   யார்   என   வினவினார் .  அவர்கள்   இதை   அமைத்தவர்   அப்பூதியடிகள்   என்றும்   அவர்   அன்னதான  சத்திரங்கள்   போன்ற    தர்ம   காரியங்கள்   பல  செய்து   இருப்பதாகவும்    எல்லாவற்றிற்கும்   அவர்   நாவுக்கரசர்   பெயரையே   சூட்டி   இருப்பதாகவும்  கூறினர் .  அப்பருக்கு   ஆச்சர்யம்   தாங்கவில்லை .  அவரை   காணவேண்டும்   என்ற  ஆவல்  எழ   அவர்     எங்கு  இருக்கிறார்   என   விசாரித்தார் .  அவர்கள்   அவர்   அக்கிரஹாரத்தில்   வசிப்பதாக   கூறினர் 

No comments:

Post a Comment