புனிதவதி அவன் உண்ட மாங்கனியை சிவபெருமான் அருளால் பெற்றாள் என்பதை பரமதத்தனால் நம்ப முடியவில்லை . அவளை நம்ப முடியாமல் மறுபடி வரவழைக்க முடியுமா என்று கேட்கிறான் . அவளும் வேறு வழியின்றி ஈசனிடம் மன்றாடுகிறாள் . ஈசன் கருணை கடலன்றோ . மறுபடியும் ஒரு கனியை வழங்குகிறார் . ஆனால் பரமதத்தன் அதை பெறமுடியாமல் அது மறைந்து விடுகிறது . அதை கண்ட அவன் அதிசயமும் ஆச்சர்யமும் அடைந்து தன் மனைவியை சாதாரண பெண்ணாக காண முடியாமல் அவளுடைய தெய்விக சக்தியை உணர்ந்த அவன் உள்ளத்தில் அவள் உயர்ந்து நின்றாள் . அவளை மனைவியாக சராசரி பெண்ணாக ஏற்க அவன் மனம் இணங்கவில்லை . அவளை தெய்வத்திற்கு சமமாக மதித்தான் . அதனால் அவளை மனைவியாக நடத்த மனம் இடம் கொடாததால் அவன் செய்வதறியாமல் திணறினான் அவளுடைய மனதை புண்படுத்தவும் விரும்பவில்லை . செய்வதறியாமல் அவன் வியாபாரம் செய்ய கடல் கடந்து போவதாக சொல்லி கப்பலில் சரக்கை ஏற்றிக்கொண்டு பாண்டிய நாடு சென்று ஒரு துறைமுகத்தில் இறங்கினான் . அங்கு வியாபாரம் தொடங்கினான் .
No comments:
Post a Comment