புனிதவதியும் பரமதத்தனும் மனமொத்த தம்பதிகளாய் சநதோஷமாக இல்லற வாழ்க்கையை நடத்தலானார்கள் . பரமதத்தனும் அவள் மனம்படி பல தரும காரியங்கள் செய்துவந்தான் . சிவனடியார்களுக்கு அமுது செய்வித்து மகிழ்ந்தான் . இவ்வாறு மகிழ்ச்சியுடன் இருந்த காலத்தில் ஒருநாள் அவனுடைய நண்பர்கள் அவனை காண வந்தனர் . அவர்கள் இரண்டு மாங்கனிகளை அவனிடம் கொடுத்தனர் . அவைகளை புனிதவாதியிடம் கொடுத்து தான் திரும்பி வந்து உண்பதாக கூறினான் . அவன் சென்றதும் ஒரு சிவனடியார் பிக்ஷைக்கு வந்தார் . அமுது படைக்க உணவு தயாராகவில்லை என்பதால் புனிதவதி பரமதத்தன் கொடுத்த கனிகளில் ஒன்றை அந்த சிவனடியார்க்கு கொடுத்தாள் . அவர் மகிழ்ச்சியுடன் அதை உண்டார் .
No comments:
Post a Comment