Tuesday, 31 July 2018

புனிதவதியும்   பரமதத்தனும்   மனமொத்த   தம்பதிகளாய்   சநதோஷமாக   இல்லற   வாழ்க்கையை   நடத்தலானார்கள் .  பரமதத்தனும்   அவள்   மனம்படி   பல   தரும   காரியங்கள்   செய்துவந்தான் .  சிவனடியார்களுக்கு   அமுது   செய்வித்து   மகிழ்ந்தான் .  இவ்வாறு   மகிழ்ச்சியுடன்   இருந்த   காலத்தில்   ஒருநாள்   அவனுடைய   நண்பர்கள்   அவனை   காண   வந்தனர் .  அவர்கள்   இரண்டு   மாங்கனிகளை   அவனிடம்   கொடுத்தனர் .  அவைகளை   புனிதவாதியிடம்   கொடுத்து   தான்   திரும்பி   வந்து   உண்பதாக   கூறினான் .   அவன்   சென்றதும்   ஒரு   சிவனடியார்   பிக்ஷைக்கு   வந்தார் .  அமுது   படைக்க   உணவு   தயாராகவில்லை   என்பதால்   புனிதவதி   பரமதத்தன்   கொடுத்த  கனிகளில்    ஒன்றை   அந்த   சிவனடியார்க்கு   கொடுத்தாள் .  அவர்   மகிழ்ச்சியுடன்   அதை   உண்டார் .

No comments:

Post a Comment