ஈசன் திருவெண்ணைநல்லூரில் சுந்தரருக்கு தன் சுய உரு வத்தை காட்டி தன்னை பாட சொல்லி அழைக்கிறார் . சுந்தரர் மெய் சிலிர்த்து தான் செய்ய இருந்த பெரும் தவறிலிருந்த தன்னை மீட்டு ஆட்கொண்ட ஈசனின் பெரும் கருணையை எண்ணி உருகி செயலிழந்து நின்றார் . ஈசன் அவரை தன்னை பாட அல்லவோ நீ பூலோகத்தில் பிறந்தாய் என்று சொல்லி பாட அவரை வற்புறுத்துகிறார் . சுந்தரர் என்ன சொல்லி பாட என திகைத்து வினவுகிறார் . ஐயன் என்னை 'பித்தா' என்று அழைத்தாய் அல்லவா அதையே பாடு என்று சொல்ல 'பித்தா பிறை சூடி ' என்கிற பதிகம் பாடுகிறார் . சுந்தரர் வரலாற்றில் இவையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறோம் .
No comments:
Post a Comment