Wednesday, 4 January 2017

ஈசன்  திருவெண்ணைநல்லூரில்  சுந்தரருக்கு  தன்  சுய  உரு வத்தை  காட்டி  தன்னை  பாட  சொல்லி  அழைக்கிறார்  . சுந்தரர்  மெய்  சிலிர்த்து  தான்  செய்ய  இருந்த  பெரும்  தவறிலிருந்த  தன்னை  மீட்டு  ஆட்கொண்ட   ஈசனின்  பெரும்  கருணையை   எண்ணி  உருகி  செயலிழந்து  நின்றார் . ஈசன்  அவரை தன்னை  பாட  அல்லவோ  நீ  பூலோகத்தில்  பிறந்தாய்  என்று  சொல்லி  பாட   அவரை  வற்புறுத்துகிறார் . சுந்தரர்  என்ன  சொல்லி பாட  என திகைத்து  வினவுகிறார் . ஐயன்  என்னை  'பித்தா'  என்று  அழைத்தாய்  அல்லவா  அதையே  பாடு  என்று  சொல்ல  'பித்தா  பிறை  சூடி ' என்கிற   பதிகம்  பாடுகிறார் . சுந்தரர்  வரலாற்றில்  இவையெல்லாம்  குறிப்பிட்டிருக்கிறோம் .

No comments:

Post a Comment