Monday, 9 January 2017

பித்தா  பிறைசூடீ  என  பாட  தொடங்கிய  சுந்தரர்  மடை  திறந்த  வெள்ளம்போல  ஐயனை  துதித்து  உள்ளம்  உருக்கச்செய்யும்  பதிகங்கள்  பாடிய  வண்ணம்  ஈசன்  குடியிருக்கும்  திவ்ய  தலங்களை  சேவித்த  வண்ணம்  செல்கிறார் . ஈசன்  தான்  வாக்களித்தபடி  தனக்கும்  சுந்தரருக்கும்  உள்ள  நெருக்கத்தை   உணர்த்திய  மெயசிலிர்க்க  வைத்த  சம்பவங்களும்  உண்டு இரவு  .  பல  ஆலயங்களில்  ஐயனை  தரிசித்து  கொண்டு  திருவதிகை  வீரட்டானம்  அடைகிறார்  சுந்தரர் . அப்பர்  வாழ்ந்த  இடமாதலால்  அங்கு  கால்  வைக்க  மனம்  ஒப்பாதவராய்  வெளியே  ஒரு  சத்திரத்தில்  தங்கி    இரவு  படுக்கிறார் . விரட்டாநீஸ்வரர்  இத்தனை  தூரம்  வந்து  விட்டு  தன்னை  காணாமல்  தன்  பக்தன்  செல்வது  மனம்  ஒப்பாமல்  ஒரு  முதியவராக  மாறி  அங்கு  செல்கிறார் .

No comments:

Post a Comment