Tuesday, 10 January 2017

ஈசன் முதியவராக  சுந்தரர்  தங்கி இருந்த   சத்திரத்திற்கு   சென்று சுந்தரர்  படுத்து  உறங்கும்  இடத்தில்  தானும்  படுத்து  தன பாதங்களை  அவர்  தலை  மேல்    வைக்கிறார் . சுந்தரர்  திடுக்கிட்டு  எழுந்து அவரை   தன்  கால்களை  நகர்த்திக்கொள்ளும்படி  உரைக்கிறார் . திரும்ப  திரும்ப  அவர்  தன்  கால்களை  அவர்  சிரத்தில்  வைக்க  சுந்தரர்  கோபம்  கொள்கிறார் . ஈசன்  சுந்தரா ! எனனை  நீ  அறியவில்லையா ? என்று  வினவ  சுந்தரர்  திடுக்கிட்டு  ஐயனை  கண்டு  மேய்சிலிர்த்து  தன்  அறியாமையை  கண்டு  வெட்கித்து அவரை  வெகுவாக  துதித்து  பாடினார் . இவ்வாறு  பல  தலங்களில்  ஈசனை துதித்து     பதிகங்கள்  பாடியவாறு  தில்லையை  வந்தடைந்தார்.

No comments:

Post a Comment