ஈசன் முதியவராக சுந்தரர் தங்கி இருந்த சத்திரத்திற்கு சென்று சுந்தரர் படுத்து உறங்கும் இடத்தில் தானும் படுத்து தன பாதங்களை அவர் தலை மேல் வைக்கிறார் . சுந்தரர் திடுக்கிட்டு எழுந்து அவரை தன் கால்களை நகர்த்திக்கொள்ளும்படி உரைக்கிறார் . திரும்ப திரும்ப அவர் தன் கால்களை அவர் சிரத்தில் வைக்க சுந்தரர் கோபம் கொள்கிறார் . ஈசன் சுந்தரா ! எனனை நீ அறியவில்லையா ? என்று வினவ சுந்தரர் திடுக்கிட்டு ஐயனை கண்டு மேய்சிலிர்த்து தன் அறியாமையை கண்டு வெட்கித்து அவரை வெகுவாக துதித்து பாடினார் . இவ்வாறு பல தலங்களில் ஈசனை துதித்து பதிகங்கள் பாடியவாறு தில்லையை வந்தடைந்தார்.
No comments:
Post a Comment