Wednesday, 11 January 2017

சுந்தரர்  வரவை  முன்பே அறிந்து  கொண்ட  தில்லை  வாழ்  அந்தணர்கள்  அவரை  மரியாதையுடன்  வரவேற்கிறார்கள் .தில்லை  கோவிலையும்  அந்த  ஈசனையும்  கண்குளிர  கண்ட  சுந்தரர்  மிக  ஆனந்த  பரவசத்துடன்  மேனி சிலிர்க்க  தன்னை  மறந்த  நிலையில்  இருந்தார் . தில்லை  கூத்தன்  அவரை  ஆரூர்  செல்லும்படி  ஆணை  இடுகிறார் . அவ்வாறே  சுந்தரர்  திருவாரூர்  செல்றார் . ஆரூரர்  எல்லோர்  கனவிலும்   வந்து  சுந்தரரை  மாப்பிள்ளை  போல்  அலங்கரித்து  கோலாகலமாக  வரவேற்க  செய்கிறார் . மேனி சிலிர்க்க  ஆரூரரின்  அன்பை  கண்டு  வியக்கிறார் . ஈசன்  அவரை  அவர்  திருமணத்தன்று  தடுத்து  நிறுத்தியதால்  இனி  எப்போதும்  மாப்பிள்ளை  கோலத்துடன்  இருக்க  ஆணை  இடுகிறார் . சுந்தரருக்கும்  திருஆரூரரு க்கும்  உள்ள  பிணைப்பு  அலாதியானது . அதிசயிக்க  தக்கது .

No comments:

Post a Comment