Wednesday, 10 June 2015

thanenai

சுந்தரர்  பரவைனாச்சியாருடன்  சில காலம்  திருவாரூரில்  தங்கி  இருந்தார் . அப்போது  சேரமான்  பெருமான்  நினைவு  வர சேரநாடு  செல்கிறார்  திருஅஞ்சய்களம்   வந்து  ஈசனை  த்யானிக்கிறார் .அப்போது  அவர்  மனம்  பெரும்  சஞ்சலத்தில்  ஆழ்கிறது . கைலைவாச  ஞாபகம்  அவரை  வாட்டுகிறது . எத்தனை  நாள்  இவ்வாறு  ஐயனை  பிரிந்திருப்பது  என்ற   வேதனை  அவரை  துன்புறுத்துகிறது . ஈசனிடம்  மிக வருந்தி  போற்றுகிறார் . அப்போது  அவருக்கு  இன்ப  அதிர்ச்சி  .வெளியில்  தேவர்கள்  யானை  அம்பாரியுடன்  சுந்தரரை  அழைத்து  செல்ல  காத்திருக்கின்றனர் . மெய்சிலிர்த்து  சுந்தரர்  இப்பாடல்  பாடுகிறார் .
தானெனை  முன் படைத்தான்   அதறிந்து  தன்  பொன்னடிக்கே
நானென்ன  பாடலெந்தொ  நாயினேனை  பொருட்படுத்து |
வானெனை  வந்தெதிர்கொள்ள  மத்த யானை  அருள்  புரிந்து
ஊனுயிர்  வேறு  செய்தான்  நொடித்தான்  மலை  உத்தமனே |
இவ்வாறு  சுந்தரர்   பூமியில்  தன்  கடமையை  செவ்வனே  முடித்து  மீண்டும்  கைலாயம்  செல்கிறார் . அவர்  நமக்கு  அளித்த  விலை  மதிக்க  முடியாத  பொக்கிஷம்  அவருடைய  திருதொண்டர்தொகை . அதனால்  கிடைத்த  நாயன்மார்கள்  வரலாறு .

No comments:

Post a Comment