Tuesday, 16 June 2015

thiruvasakam

திருவாசகத்துக் கு உருகாதார்  எவ்வாசகத்துக்கும்  உருகார்   இது  எல்லோ  ரும்  அறிந்த  வழக்கு .திருவாசகத்தேன்  என்று  சான்றோரால்  உயர்வாக  சொல்லப்படுகிறது . தேன்  ஒரு அற்புத  பொருள் . தேன்  எத்தனை  காலம்  வைத்தாலும்  கெடாது . தேனில்  எதை  போட்டு  வைத்தாலும்  அந்த  பொருளும்  கெடாது . அத்தனை  உயர்ந்தது  திருவாசகமும் . மாணிக்கவாசகர்   ஈசனிடம்  எதை  வேண்டியோ  எதையாவது   பெறவோ  பாடியது  அல்ல  திருவாசகம் . நெஞ்சம்  உருகி  கண்ணீர்  ஆறாய்  பெருக  உணர்ச்சி  வயப்பட்டு  இதயத்திலிருந்து  பொங்கி  வழிந்த  வார்த்தைகள் . கேட்போர்  நெஞ்சையும்  கலங்க  வைக்கும்  பாக்கள் . ஈசனே  மாணிக்கவாசகர்  சொல்லகேட்டு  ஓலையில்  எழுதி  கையொப்பமிட்டு   தில்லை  கோயில்  நடராஜர்  சன்னதி  முன்  வைத்தார்  என்றால்  இதன்  பெருமைதான்  என்னவென்று  சொல்ல . ஈசன்  கருணையை  தான்  எப்படி  போற்ற ?  இதனால்  தான்  திருவாசகம்  நமக்கு  சேதமில்லாமல்  முழுமையாக  கிடைத்திருக்கிறது .

No comments:

Post a Comment